ETV Bharat / sitara

திகில் படத்தில் நடிக்கும் பார்வதி நாயர்!

author img

By

Published : Dec 4, 2020, 7:59 AM IST

சென்னை: நடிகை பார்வதி நாயர் நடிக்கவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பார்வதி நாயர்
பார்வதி நாயர்

’சீதக்காதி’ படத்தைத் தொடர்ந்து நடிகை பார்வதி நாயர், தமிழில் திகில் படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கவுள்ள இப்படத்தை, கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரூபம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படதில், பார்வதி நாயர் பேயாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் போஸ்டரில் பார்வதி, கண்ணாடியில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும், பின்பக்கத்திலிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போன்றும் அமைந்துள்ளது.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக சென்னையில் நிறைவுசெய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'என்னைவிட எப்போதும் முன்னே நிற்கிறாய்' - விஷால் குறித்து ஆர்யா ட்வீட்!

’சீதக்காதி’ படத்தைத் தொடர்ந்து நடிகை பார்வதி நாயர், தமிழில் திகில் படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கவுள்ள இப்படத்தை, கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரூபம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படதில், பார்வதி நாயர் பேயாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் போஸ்டரில் பார்வதி, கண்ணாடியில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும், பின்பக்கத்திலிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போன்றும் அமைந்துள்ளது.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக சென்னையில் நிறைவுசெய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'என்னைவிட எப்போதும் முன்னே நிற்கிறாய்' - விஷால் குறித்து ஆர்யா ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.