ETV Bharat / sitara

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இணைந்த 'பாய்ஸ்'

author img

By

Published : Jul 19, 2021, 12:24 PM IST

சென்னை: இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து புதிதாக எடுக்கவுள்ள '#RC15' திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

thaman
thaman

இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

தற்காலிகமாக '#RC15' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'பாய்ஸ்' படத்திற்கு பின் தமன் - ஷங்கர் இருவரும் இப்படத்தின் மூலம் இணைகின்றனர். ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் இரண்டு பாடல்களின் படப்படிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2001ஆம் ஆண்டு 'முதல்வன்' பட ரீமேக்கை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் எடுத்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் அல்லாத வேற்று மொழி ஹீரோவை ஷங்கர் இயக்கவுள்ளார்.

'#RC15' படத்தின் கதை குறித்தான விவாதம் சமீபத்தில் இறுதியானது. இதனையடுத்து படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளனர்.

இதையும் படிங்க: ராஜமௌலியின் 'RRR' - மகனை பார்த்து கண்கலங்கிய சிரஞ்சீவி!

இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

தற்காலிகமாக '#RC15' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'பாய்ஸ்' படத்திற்கு பின் தமன் - ஷங்கர் இருவரும் இப்படத்தின் மூலம் இணைகின்றனர். ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் இரண்டு பாடல்களின் படப்படிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2001ஆம் ஆண்டு 'முதல்வன்' பட ரீமேக்கை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் எடுத்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் அல்லாத வேற்று மொழி ஹீரோவை ஷங்கர் இயக்கவுள்ளார்.

'#RC15' படத்தின் கதை குறித்தான விவாதம் சமீபத்தில் இறுதியானது. இதனையடுத்து படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளனர்.

இதையும் படிங்க: ராஜமௌலியின் 'RRR' - மகனை பார்த்து கண்கலங்கிய சிரஞ்சீவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.