ETV Bharat / sitara

புதுச்சேரியில் 2 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடக்கம் - புதுச்சேரியில் தொடங்கிய படப்பிடிப்பு

புதுச்சேரி: கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

raashi kanna
raashi kanna
author img

By

Published : Jul 1, 2021, 4:02 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் தொற்று குறைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதியளித்தது.

பின்னர் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் சுமார் இரண்டு மாத காலமாகப் புதுவையில் எந்தவொரு படப்பிடிப்பும் நடத்தப்படாமல் இருந்தது.

படப்பிடிப்பில் ராஷி கண்ணா
படப்பிடிப்பில் ராஷி கண்ணா

இந்நிலையில் ஊரடங்குத் தளர்வில் படப்பிடிப்புகள், 100 பேருடன், நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூலை.1) முதல் புதுவையில் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

புதுச்சேரியில் தொடங்கிய படப்பிடிப்பு

அதன்படி முதல் படமாக பிருத்திவி ராஜ், ராஷி கண்ணா நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பழைய நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

இதையும் படிங்க: ’குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு: யுவன் ட்வீட்

கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் தொற்று குறைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதியளித்தது.

பின்னர் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் சுமார் இரண்டு மாத காலமாகப் புதுவையில் எந்தவொரு படப்பிடிப்பும் நடத்தப்படாமல் இருந்தது.

படப்பிடிப்பில் ராஷி கண்ணா
படப்பிடிப்பில் ராஷி கண்ணா

இந்நிலையில் ஊரடங்குத் தளர்வில் படப்பிடிப்புகள், 100 பேருடன், நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூலை.1) முதல் புதுவையில் இரண்டு மாதத்துக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

புதுச்சேரியில் தொடங்கிய படப்பிடிப்பு

அதன்படி முதல் படமாக பிருத்திவி ராஜ், ராஷி கண்ணா நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பழைய நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

இதையும் படிங்க: ’குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு: யுவன் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.