கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை, தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
ஆனால், மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினர் உள்ளிட்டோர் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று சுத்தம் செய்வது, மருந்து தெளிப்பது என்று பணியாற்றி வருகின்றனர்.
-
This one is for all the sanitation workers deployed on our streets to make sure the surroundings are kept clean and sanitised. While we are safe in our homes, they come out everyday leaving their own to ensure we remain out of harm's way... pic.twitter.com/P26e9t4kzc
— Mahesh Babu (@urstrulyMahesh) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This one is for all the sanitation workers deployed on our streets to make sure the surroundings are kept clean and sanitised. While we are safe in our homes, they come out everyday leaving their own to ensure we remain out of harm's way... pic.twitter.com/P26e9t4kzc
— Mahesh Babu (@urstrulyMahesh) April 16, 2020This one is for all the sanitation workers deployed on our streets to make sure the surroundings are kept clean and sanitised. While we are safe in our homes, they come out everyday leaving their own to ensure we remain out of harm's way... pic.twitter.com/P26e9t4kzc
— Mahesh Babu (@urstrulyMahesh) April 16, 2020
இவர்களின் இந்தப் பணிக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில், "சுற்றுப்புறங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதா... என உறுதி செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்த செய்தி. நாம் நம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் போது அவர்கள் தினமும் வெளியே வந்து, நாம் ஆபத்தில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த கொடிய வைரஸூக்கு எதிரான இந்தப் போர் முன்வரிசைப் பணியாளர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. உங்கள் ஒவ்வொருக்கும் என்னுடைய ஆசிகளும் அளவில்லா அன்பும்; அதீத மரியாதையும் இதயம் கனிந்த நன்றியும்" என ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் காவல் துறையினர் நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகக் கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.