ETV Bharat / sitara

கன்னட திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்ற தமிழர்!

author img

By

Published : Sep 20, 2021, 1:39 PM IST

சென்னை: 'யஜமானா' என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் பொன்குமரன் வென்றுள்ளார்.

siima
siima

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொன்குமரன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொன்குமரன், கன்னடத்தில், 2011ஆம் ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அப்போது அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது. பொன்குமரன், தமிழ், கன்னடத்தில் வெளியான 'சாருலதா' படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்திற்கு பொன்குமரன் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.19) நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில், பொன்குமரனுக்கு 'யஜமானா' என்ற கன்னட திரைப்படத்தை இயக்கத்திற்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

'யஜமானா' பாரம்பரிய எண்ணெய்யைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா, தன்யா ஹோப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கர்நாடகா முழுவதும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது.

தற்போது பொன்குமரன் முன்னணி நடிகர்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி. வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சைமா 2021 - 7 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொன்குமரன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொன்குமரன், கன்னடத்தில், 2011ஆம் ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அப்போது அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது. பொன்குமரன், தமிழ், கன்னடத்தில் வெளியான 'சாருலதா' படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்திற்கு பொன்குமரன் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.19) நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில், பொன்குமரனுக்கு 'யஜமானா' என்ற கன்னட திரைப்படத்தை இயக்கத்திற்காக சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

'யஜமானா' பாரம்பரிய எண்ணெய்யைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா, தன்யா ஹோப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கர்நாடகா முழுவதும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது.

தற்போது பொன்குமரன் முன்னணி நடிகர்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி. வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சைமா 2021 - 7 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.