'ஜிப்ஸி' திரைப்படத்தின் டீஸர் ரிலீசான காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் படத்துக்கான ஹைப் பெருமளவில் இருந்தது.
படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் சில காட்சிகள் இருந்ததால் இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில், சிக்கல் ஏற்பட்டது. அதையும் மீறி சான்றிதழுக்காக படக்குழு மேல் முறையீடு செய்து, ஒரு வழியாக 'ஏ' தரச் சான்றிதழையும் பெற்றுவிட்டது.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஆண்டு ஜனவரியில் குடியரசு தினத்தையொட்டி 24ஆம் தேதி படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹிந்துத்துவா குறித்த காட்சிகளால் 'ஜிப்ஸி' க்கு வந்த சிக்கல்