சென்னை: காவல் துறையினர் துன்புறுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல் ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமல் ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏற்கனவே வழக்கின் விசாரணைக்கு ஆஜாரான நிலையில், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்துவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், விரைவில் விசாரிக்கவுள்ளது.