சென்னை: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் பீட்சா. இதனை சி.வி. குமார் தயாரித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த பீட்சா 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தற்போது பீட்சா 3ஆம் பாகத்தை சி.வி. குமார் தயாரித்து வருகிறார்.
அஸ்வின், ரவீனா, பவித்ரா, காளி வெங்கட், இயக்குநர் கௌரவ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடைபெற்று வருகிறது.