ETV Bharat / sitara

போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்!

author img

By

Published : May 4, 2020, 8:46 PM IST

போஸ்ட் புரொடக்ஷன் பணி தொடர தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே, தமிழ் திரைப்படத்துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் ஒருசில துறைகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று படங்களின் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி தர வேண்டும் என்று, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பளர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், ”சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால் 50 முதல் 100 பேர் இணைந்து ஷூட்டிங் செய்ய அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து, இந்தப் பணிகளுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்துப் படங்களை தயார் செய்ய முடியும்" என கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: 'திரைத்துறை நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’- ஆர்.கே. செல்வமணி

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே, தமிழ் திரைப்படத்துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் ஒருசில துறைகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று படங்களின் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி தர வேண்டும் என்று, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பளர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், ”சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால் 50 முதல் 100 பேர் இணைந்து ஷூட்டிங் செய்ய அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து, இந்தப் பணிகளுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்துப் படங்களை தயார் செய்ய முடியும்" என கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: 'திரைத்துறை நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’- ஆர்.கே. செல்வமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.