ETV Bharat / sitara

'சோம்பலே நம் முதல் எதிரி' - செல்வராகவன்

author img

By

Published : Jan 22, 2020, 12:26 PM IST

சோம்பல் என்ற ஒன்றை வைத்து நாம் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிக்கலாக்குகிறோம் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

selvaraghavan
selvaraghavan


செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக 'என்ஜிகே' படம் வெளியானது. இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி நீண்ட நாள்களாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பு தரப்பு சிக்கல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

இதனிடையே தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் செல்வராகவன் இயக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதிய படத்திற்கான பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

selvaraghavan
செல்வராகவன் - தனுஷ்

மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவனுக்கு என்னதான் ஆச்சு என்ற கோணத்தில் ரசிகர்களும் அவரது வரவுக்காகக் காத்திருக்கின்றனர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில், அடிக்கடி புதுப்புது கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்.

இதனிடையே தற்போது ட்வீட் செய்துள்ள அவர், 'வாழ்க்கையில் அனைத்துமே எளிமை, சுலபம். ஆனால் நாம் நமது அதீத சோம்பலால் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிக்கலாக்குகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

  • Everything in life is simple and easy. By our sheer laziness we make things so complicated! 🤓🤓

    — selvaraghavan (@selvaraghavan) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது இந்த ட்வீட் பதிவைக்கண்ட இணையவாசிகள் பலரும், எப்போது அடுத்த படம் பற்றி அறிவிப்பை வெளியிடுவீர்கள், 'ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2' உள்ளிட்ட படங்களை எப்போது தொடங்குவீர்கள் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு அவருக்குப் பாராட்டுகளும் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

ஆஸ்தான இயக்குநருடன் இணையும் சல்மான் கான்


செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக 'என்ஜிகே' படம் வெளியானது. இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி நீண்ட நாள்களாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பு தரப்பு சிக்கல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

இதனிடையே தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றையும் செல்வராகவன் இயக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதிய படத்திற்கான பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

selvaraghavan
செல்வராகவன் - தனுஷ்

மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவனுக்கு என்னதான் ஆச்சு என்ற கோணத்தில் ரசிகர்களும் அவரது வரவுக்காகக் காத்திருக்கின்றனர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில், அடிக்கடி புதுப்புது கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்.

இதனிடையே தற்போது ட்வீட் செய்துள்ள அவர், 'வாழ்க்கையில் அனைத்துமே எளிமை, சுலபம். ஆனால் நாம் நமது அதீத சோம்பலால் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிக்கலாக்குகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

  • Everything in life is simple and easy. By our sheer laziness we make things so complicated! 🤓🤓

    — selvaraghavan (@selvaraghavan) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது இந்த ட்வீட் பதிவைக்கண்ட இணையவாசிகள் பலரும், எப்போது அடுத்த படம் பற்றி அறிவிப்பை வெளியிடுவீர்கள், 'ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2' உள்ளிட்ட படங்களை எப்போது தொடங்குவீர்கள் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு அவருக்குப் பாராட்டுகளும் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

ஆஸ்தான இயக்குநருடன் இணையும் சல்மான் கான்

Intro:Body:

selvaraghavan



Everything in life is simple and easy. By our sheer laziness we make things so complicated!






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.