ETV Bharat / sitara

அரசை விமர்சித்தால் தேச துரோகி, நகர்ப்புற நக்சலா...? - பாரதிராஜா கண்டனம்

author img

By

Published : Oct 8, 2019, 1:52 PM IST

Updated : Oct 8, 2019, 6:36 PM IST

சென்னை: தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட கும்பல் படுகொலைக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி, வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் போக்கு அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது.

தங்களுடைய கவலையை தானே அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசதுரோக வழக்குப்பதிவு செய்வதை ஏற்க முடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

Director Bharathiraja condemns sedition case against celebrities
இயக்குநர் பாரதிராஜா கண்டன அறிக்கை

கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவதும் பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத்துரோகக் வழக்கினைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி, வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் போக்கு அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது.

தங்களுடைய கவலையை தானே அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசதுரோக வழக்குப்பதிவு செய்வதை ஏற்க முடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

Director Bharathiraja condemns sedition case against celebrities
இயக்குநர் பாரதிராஜா கண்டன அறிக்கை

கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவதும் பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத்துரோகக் வழக்கினைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Intro:49 பிரபலங்களின் மீதான தேசத்துரோக வழக்கைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கைBody:தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட கும்பல் படுகொலைக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் மணிரத்னம் அடூர் கோபாலகிருஷ்ணன் ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேச விரோதி நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டிருந்தார்கள். தேச விரோத வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது. அரசு சார்பில் பேசியவர்கள் மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும் பொதுவெளியில் பேச கூடாது என்று அச்சுறுத்துவது பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத்துரோகக் வழக்கினைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் Conclusion:என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பாரதிராஜா கேட்டு கொண்டுள்ளார்.
Last Updated : Oct 8, 2019, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.