ETV Bharat / sitara

'ரஜினிகாந்தை நேரில் சந்தித்தேனா?' இயக்குநர் தேசிங் பெரியசாமி விளக்கம்!

author img

By

Published : Aug 3, 2020, 3:25 PM IST

இயக்குநர் தேசிங் பெரியசாமி, தான் ரஜினிகாந்தை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி
ரஜினி

நடிகர் துல்கர் சல்மான், ரிட்டு வர்மா நடிப்பில் வெளியான திரைப்படம், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை ரஜினி பார்த்துவிட்டு, இயக்குநர் தேசிங் பெரியசாமிக்குப் பாராட்டுத் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி அதற்காக இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினிகாந்தை நேரில் சந்தித்ததாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து, இயக்குநர் தேசிங் பெரியசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ரஜினிகாந்தை சந்திக்கவில்லை. அப்புகைப்படம் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. தயவு செய்து, இது போன்ற போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான், ரிட்டு வர்மா நடிப்பில் வெளியான திரைப்படம், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை ரஜினி பார்த்துவிட்டு, இயக்குநர் தேசிங் பெரியசாமிக்குப் பாராட்டுத் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி அதற்காக இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினிகாந்தை நேரில் சந்தித்ததாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து, இயக்குநர் தேசிங் பெரியசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ரஜினிகாந்தை சந்திக்கவில்லை. அப்புகைப்படம் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. தயவு செய்து, இது போன்ற போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.