ETV Bharat / sitara

'பாகுபலி'...'கேஜிஎஃப்' வரிசையில் இணைந்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!

author img

By

Published : May 14, 2021, 5:58 PM IST

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

Allu Arjun
Allu Arjun

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு, சுகுமார் இயக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்தின் டீசர், அவரது பிறந்த நாளான ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

தற்போது இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது, "படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மீதி உள்ளன. இரண்டு பாகங்களைச் சேர்த்து சுமார் ரூ. 250 - 270 கோடி வரை செலவாகலாம். இரண்டு பாகங்களுக்குப் படத்தின் கதையைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, இந்த முடிவை எடுத்துள்ளோம்.

நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் உயிர்ப்பெற்று வளர்ந்து நிற்கிறது. அல்லு அர்ஜூனின் 'புஷ்பராஜ் அறிமுகம்' டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறந்த நடிகர்கள், கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால், இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க, நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி', 'கேஜிஎஃப்' உள்ளிட்ட படங்கள் இரண்டு பாகங்களாக உருவான நிலையில், தற்போது அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படமும் இரண்டு பாகங்களாக உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு, சுகுமார் இயக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்தின் டீசர், அவரது பிறந்த நாளான ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

தற்போது இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது, "படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மீதி உள்ளன. இரண்டு பாகங்களைச் சேர்த்து சுமார் ரூ. 250 - 270 கோடி வரை செலவாகலாம். இரண்டு பாகங்களுக்குப் படத்தின் கதையைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, இந்த முடிவை எடுத்துள்ளோம்.

நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் உயிர்ப்பெற்று வளர்ந்து நிற்கிறது. அல்லு அர்ஜூனின் 'புஷ்பராஜ் அறிமுகம்' டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறந்த நடிகர்கள், கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால், இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க, நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி', 'கேஜிஎஃப்' உள்ளிட்ட படங்கள் இரண்டு பாகங்களாக உருவான நிலையில், தற்போது அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படமும் இரண்டு பாகங்களாக உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.