ETV Bharat / sitara

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய்!

author img

By

Published : Jul 27, 2020, 5:42 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பம்
அமிதாப் பச்சன் குடும்பம்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களது தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. ஐஸ்வர்யாவுக்கும், ஆராத்யாவுக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களது தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. ஐஸ்வர்யாவுக்கும், ஆராத்யாவுக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.