இயக்குநர் ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்'. இதில் ஆர். கே சுரேஷூக்கு நயாகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறிய இடைவேளைக்குப் பின் நடிகர் ராம்கி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுரபி பிக்ஷர்ஸ் ஜோதி முருகன் - தாய் மூவிஸ் விஜய் கார்த்திக் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சத்யபிரகாஷ் ஜெயின், அழகன்தமிழ்மணி, விடியல் ராஜு, இயக்குநர்கள் ஆர்வி உதயகுமார், பவித்ரன் உள்ளிட்டோருடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர்வி உதயகுமார், ஆர்கே சுரேஷ் நிச்சயம் மிகப்பெரிய ஹீரோவாக வருவார். ரஜினியின் 'பைரவி' படத்தை ரீமேக் உரிமை வாங்கினால் இவரை வைத்து நான் அப்படத்தை இயக்குவேன் என்றார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ஆர்கே சுரேஷ் பேசுகையில், 'வேட்டை நாய்' படத்தில் இயக்குநர் என்னை நன்றாக செதுக்கியுள்ளார். திரையரங்குகளோ அல்லது ஓடிடி தளங்களோ பெரிய பட்ஜெட் படங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை சிறிய பட்ஜெட் படங்களுக்கும் கொடுங்கள் என்றார்.