ETV Bharat / sitara

இயக்குநர் ராஜசேகர் மரணம்! - ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

author img

By

Published : Sep 8, 2019, 12:20 PM IST

Updated : Sep 9, 2019, 8:51 AM IST

rajasekar

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவர் ராஜசேகர். இப்படத்தை ராபர்ட் - ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கினர்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' திரைப்படத்தில் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் வந்தையடுத்து இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானர்.

இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகர், சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமான 'சரவணன் மீனாட்சி' தொடரில் சரவணனின் தந்தையாக வந்து பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தார்.

இவர் நடிகை சரண்யாவை திருமணம் செய்தபின் விவாகரத்துப்பெற்றார். பின் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துவந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இழப்பு திரையுலகிற்கும் சின்னத்திரைக்கும் பேரிழப்பாகும்.

'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' போன்ற படங்கள் ராபர்ட் - ராஜசேகர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய படங்களாகும்.

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவர் ராஜசேகர். இப்படத்தை ராபர்ட் - ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கினர்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' திரைப்படத்தில் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் வந்தையடுத்து இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானர்.

இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகர், சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமான 'சரவணன் மீனாட்சி' தொடரில் சரவணனின் தந்தையாக வந்து பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தார்.

இவர் நடிகை சரண்யாவை திருமணம் செய்தபின் விவாகரத்துப்பெற்றார். பின் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துவந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இழப்பு திரையுலகிற்கும் சின்னத்திரைக்கும் பேரிழப்பாகும்.

'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' போன்ற படங்கள் ராபர்ட் - ராஜசேகர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய படங்களாகும்.

Intro:இயக்குனர் ராஜசேகர் உடல்நலக் குறை காரணமாக இன்று காலமானார்Body:
'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.

பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்தவர்...‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் என்றாலே அவர் ஞாபகமும் வரும்...

இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். சென்னை சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த
இவர் நடிகை சரண்யாவை திருமணம் முடித்து பின்னர் விவாகரத்து பெற்றவர் அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அவர் மதுப்பழக்கத்திற்கு உள்ளானார் இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்தவர்...‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் என்றாலே ராஜசேகரின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும் ஞாபகமும் வரும்

Conclusion:'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' படங்கள் ராபர்ட் ராஜசேகர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய படங்களாகும்
Last Updated : Sep 9, 2019, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.