ETV Bharat / sitara

அருண் விஜய் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

அருண் விஜய் நடிக்க இருக்கும் 'பாக்ஸர்' படத்தின் பூஜை கோலாகலமாக தொடங்கியது.

அருண் விஜய்
author img

By

Published : Jun 23, 2019, 2:22 PM IST

நல்ல திறமையாளராக இருந்தும் அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காத நபராக இருந்துவருகிறார். 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக இருந்து வருகிறது.இதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'தடம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'செக்கச் சிவந்த வானம்' படத்தில் இவரது நடிப்பை பெரிதும் பாராட்டுக்குள்ளானது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் விவேக் இயக்கும் 'பாக்ஸர்' படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் கூறிய 'பாக்ஸர்' படத்தின் கதையைக் கேட்டதும் அருண் விஜய்க்கு பிடித்துப் போனதாம்.

அருண் விஜய்
அருண் விஜய்

அருண் விஜய் 'பாக்ஸர்' படத்திற்காக எடுத்துக்கொண்ட பயிற்சிக் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாக்ஸர் படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் பூஜை விழாவில், அருண் விஜயின் தந்தை விஜயகுமார், இயக்குநர் ஹரி, ப்ரீதா ஹரி, இயக்குநர் சாம் ஆண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

நல்ல திறமையாளராக இருந்தும் அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்காத நபராக இருந்துவருகிறார். 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக இருந்து வருகிறது.இதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'தடம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'செக்கச் சிவந்த வானம்' படத்தில் இவரது நடிப்பை பெரிதும் பாராட்டுக்குள்ளானது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் விவேக் இயக்கும் 'பாக்ஸர்' படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் கூறிய 'பாக்ஸர்' படத்தின் கதையைக் கேட்டதும் அருண் விஜய்க்கு பிடித்துப் போனதாம்.

அருண் விஜய்
அருண் விஜய்

அருண் விஜய் 'பாக்ஸர்' படத்திற்காக எடுத்துக்கொண்ட பயிற்சிக் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாக்ஸர் படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் பூஜை விழாவில், அருண் விஜயின் தந்தை விஜயகுமார், இயக்குநர் ஹரி, ப்ரீதா ஹரி, இயக்குநர் சாம் ஆண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Intro:சேலத்தின் பிரதான நதியான திருமணிமுத்தாற்றுக்கு நீர் வழங்கும் கொடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது என்றும் ஓடைகளின் குறுக்கே கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு மழைநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதால் பல ஏரிகள் நீரின்றி வறண்டு போய் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Body:சேலம் மாவட்டத்தில் பிரமாண்ட உயரத்தோடு அமைந்துள்ளது சேர்வராயன் மலைத் தொடர். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரசன் என்று சுற்றுலா பிரியர்கள் அழைக்கும் சேர்வராயன் மலைத்தொடரில் பல்வேறு புராதன வரலாற்றுச் சுவடுகளும் வளங்களும் இன்றும் நிறைந்திருக்கின்றன.

காப்பித் தோட்டங்களும் சோலை வனக் காடுகளும் நிறைந்துள்ள சேர்வராயன் மலையில் பத்துக்கும் மேற்பட்ட ஓடைகள் நீர்வழித்தடங்கள் தடங்களாக மலையின் நான்கு புறமும் கீழே இறங்கி திருமணிமுத்தாறு என்னும் ஆறாக உருமாறி ஓடுகிறது.

பருவ மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மணிமுத்தாற்றில் இப்போது கழிவுநீர் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நகரத்தினுள்ளே ஓடுவதால் கழிவுநீர் கலக்கிறது என்று கூறப்பட்டாலும் சேர்வராயன் மலையின் அடியில் தொடங்கும் திருமணிமுத்தாறு நீர்வழி தடங்கலான ஓடைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில், சமன் செய்யப்பட்டு வயல் வெளியாகவும், வீட்டுமனைகளாகவும் மாற்றப்பட்டதால் , காலம் காலமாக மழை வெள்ளம் ஓடிய பகுதி வறண்டு ஓடைகளே இல்லாமல் போன நிலையில் இருக்கிறது என்று விவசாயிகள் வேதனையோடு பதிவு செய்கின்றனர்.

சேலம் அயோத்தியா பட்டணத்தை அடுத்த குப்பனூர் , சுக்கம்பட்டி, தாதனூர் , பூவானூர் ஆகிய பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அயல் நாயக்கனேரி, சன்ன ஏரி உள்ளிட்ட 4 ஏரிகள் தற்போது நீரின்றி வறண்டு போய் உள்ளது.

இந்த ஏரி களுக்கான நீர்வழித்தடங்கள் ஆக உள்ள கல்லாறு ஓடை உள்ளிட்ட ஓடைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது காரணம் என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.

இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் குடிப்பதற்கும் ஆடுமாடுகளின் தாகம் தீர்க்கவும் இரண்டு நாளைக்கு ஒரு முறை விலை கொடுத்து தண்ணீர் வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல திருமணிமுத்தாறு நீர் வழித்தடமாக உள்ள ஓடைகளும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் கையில் சிக்கி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன அவலமும் நடந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயிகள் செல்வராஜ் , அய்யன்துரை, ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஓடை நிலங்களை ஆக்கிரமித்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து நீர் வழித்தடங்களை காப்பாற்றி கொடுத்து விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஓடைகளை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த மனு மீது இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொந்தளிப்போடு தெரிவித்தனர்.


Conclusion:பருவமழை தொடங்க உள்ள இந்த நேரத்தில் நீர் வழித்தடங்களை மீட்டு, தனியார் பிடியில் உள்ள ஓடைகளை மீட்டால் மட்டுமே சேர்வராயன் மலையடிவார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சினை இன்றி, விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.