ETV Bharat / sitara

'நான் யாரையும் ஏமாற்றும் நோக்குடன் பழகவில்லை' - கடந்த காலம் குறித்து பேசிய தீபிகா

author img

By

Published : Mar 13, 2020, 10:12 AM IST

நான் யாரையும் ஏமாற்றும் நோக்குடனும் வழி தவறவைக்கும் நோக்குடனும் யாரிடமும் இதுநாள்வரை பழகியது கிடையாது எனத் தனது கடந்த கால உறவுகள் குறித்து நடிகை தீபிகா படுகோனே நினைவுகூர்ந்துள்ளார்.

Deepika
Deepika

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் முன் ரன்பீர் கபூருடன் பழகிவந்தார். அப்போது அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வர் எனச் செய்திகள் அடிக்கடி உலா வந்தன. ஆனால் திடீரென இருவரும் பிரிந்தனர்.

இதன்பின் தீபிகா ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர் தற்போது ஆலியா பட்டுடன் பழகிவருகிறார். இவர்கள் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது கடந்த கால உறவுமுறை குறித்து பகிர்ந்துள்ளார் தீபிகா. அதில் அவர் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை பாலியல் வேட்கை என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல; உணர்வுகள் ரீதியானதும்கூட. என்னுடன் இருப்பவர்களை நான் எப்போதும் ஏமாற்றும் நோக்குடனும் அவர்களை வழிதவறவைக்கும் நோக்குடனும் இதுநாள் வரை பழகியது கிடையாது.

நான் ஒருவரை ஏமாற்றம் எண்ணம் இருந்தால் ஏன் அவருடன் அதிகம் நெருங்கிப் பழக வேண்டும். இதை நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும்.

நான் கடந்தகாலம் உறவுமுறையில் காயமடைந்திருக்கலாம். நான் எனது நண்பர்களுக்கு எப்போதும் இரண்டாவது வாய்ப்பு கொடுப்பேன். ஆனால் எனது கடந்தகால நண்பருக்கு அப்படி வாய்ப்பு கொடுத்தும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதனால் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. எல்லோரும் என்னைத் தவறாக நினைத்தனர். ஆனால் அவரிடம்தான் பிரச்னை உள்ளது. துரோகமே ஒரு உறவின் பிரிவுக்கு முக்கியக் காரணம். துரோகம் வந்தால் நம் உறவில் மரியாதை, நம்பிக்கை எல்லாம் விலகிவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் முன் ரன்பீர் கபூருடன் பழகிவந்தார். அப்போது அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வர் எனச் செய்திகள் அடிக்கடி உலா வந்தன. ஆனால் திடீரென இருவரும் பிரிந்தனர்.

இதன்பின் தீபிகா ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர் தற்போது ஆலியா பட்டுடன் பழகிவருகிறார். இவர்கள் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது கடந்த கால உறவுமுறை குறித்து பகிர்ந்துள்ளார் தீபிகா. அதில் அவர் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை பாலியல் வேட்கை என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல; உணர்வுகள் ரீதியானதும்கூட. என்னுடன் இருப்பவர்களை நான் எப்போதும் ஏமாற்றும் நோக்குடனும் அவர்களை வழிதவறவைக்கும் நோக்குடனும் இதுநாள் வரை பழகியது கிடையாது.

நான் ஒருவரை ஏமாற்றம் எண்ணம் இருந்தால் ஏன் அவருடன் அதிகம் நெருங்கிப் பழக வேண்டும். இதை நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும்.

நான் கடந்தகாலம் உறவுமுறையில் காயமடைந்திருக்கலாம். நான் எனது நண்பர்களுக்கு எப்போதும் இரண்டாவது வாய்ப்பு கொடுப்பேன். ஆனால் எனது கடந்தகால நண்பருக்கு அப்படி வாய்ப்பு கொடுத்தும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதனால் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. எல்லோரும் என்னைத் தவறாக நினைத்தனர். ஆனால் அவரிடம்தான் பிரச்னை உள்ளது. துரோகமே ஒரு உறவின் பிரிவுக்கு முக்கியக் காரணம். துரோகம் வந்தால் நம் உறவில் மரியாதை, நம்பிக்கை எல்லாம் விலகிவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.