ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் வழக்கு: விசாரணை வளையத்தில் 25 பாலிவுட் பிரபலங்கள்!

author img

By

Published : Sep 8, 2020, 3:23 PM IST

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் பாலிவுட் பிரபலங்கள் 25 பேரிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ncb to summon bollywood stars ncb to summon 25 bollywood actors ncb sushant case probe sushant case updates ssr case சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் மும்பை
ncb to summon bollywood stars ncb to summon 25 bollywood actors ncb sushant case probe sushant case updates ssr case சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் மும்பை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் மற்றும் சினிமாத்துறையில் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 25 திரைபிரபலங்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளியான தகவலின்படி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தியபோது ரியா சிலரின் பெயரை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ரியாவைத் தவிர, தீபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பபட உள்ளது. இவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பவும் வாய்ப்புள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியாவிடம் ஏற்கனவே பலமணி நேரம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் நடிகை ரியா, சுஷாந்தின் சகோதரி பிரியங்கா சிங் மீது மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் மற்றும் சினிமாத்துறையில் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 25 திரைபிரபலங்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளியான தகவலின்படி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தியபோது ரியா சிலரின் பெயரை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ரியாவைத் தவிர, தீபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பபட உள்ளது. இவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பவும் வாய்ப்புள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியாவிடம் ஏற்கனவே பலமணி நேரம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் நடிகை ரியா, சுஷாந்தின் சகோதரி பிரியங்கா சிங் மீது மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.