ETV Bharat / sitara

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜெனிலியா- ரித்தீஷ் தம்பதியினர் - கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்

மும்பை: பாலிவுட் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ரித்தீஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

vaccine
vaccine
author img

By

Published : May 10, 2021, 7:15 PM IST

இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ரித்தீஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நடிகை சோனாக்ஷி சின்ஹா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களையும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் தம்பதி ரித்தீஷ் தேஷ்முக்-ஜெனிலியா தேஷ்முக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கரோனா தடுப்பூசி போடுங்கள்... இந்த அரக்கனை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" எனப் பதிவிட்டுள்ளனர். முன்னதாக கரோனா தடுப்பூசியை அமிதாப் பச்சன், சல்மான் கான், சஞ்சய் தத், ஹேமமாலினி, மோகன்லால், கமல்ஹாசன், நாகார்ஜுனா, ராதிகா மதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்களான சோனாக்ஷி சின்ஹா, ரித்தீஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நடிகை சோனாக்ஷி சின்ஹா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களையும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் தம்பதி ரித்தீஷ் தேஷ்முக்-ஜெனிலியா தேஷ்முக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கரோனா தடுப்பூசி போடுங்கள்... இந்த அரக்கனை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" எனப் பதிவிட்டுள்ளனர். முன்னதாக கரோனா தடுப்பூசியை அமிதாப் பச்சன், சல்மான் கான், சஞ்சய் தத், ஹேமமாலினி, மோகன்லால், கமல்ஹாசன், நாகார்ஜுனா, ராதிகா மதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் செலுத்திக்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.