ETV Bharat / sitara

முன்னாள் மனைவியின் செயலுக்கு ஷில்பாவை சமதானப்படுத்தும் ராஜ் குந்தரா

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது முன்னாள் மனைவி கவிதா வெளியிட்டுள்ள பழைய வீடியோ தற்போது தங்களது குடும்பத்தில் அமைதியை கெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 12, 2021, 10:39 PM IST

Raj Kundra
Raj Kundra

நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவா உடன் ‘மிஸ்டர் ரோமியோ’, விஜய்யுடன், 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 2012ஆம் ஆண்டு வியான் என்ற ஆண்குழந்தையும் ஷமிஷா என்ற பெண்குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் ஷில்பா தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். அப்போது ராஜ் குந்தாரவின் முதல் மனைவி கவிதா, தனது கடந்த கால வாழ்க்கை குறித்த நேர்காணலின் பழைய வீடியோவில் இணையத்தில் வெளியிட்டார். அதில், நானும் எனது கணவர் ராஜூம் பிரிவதற்கு ஷில்பா ஷெட்டியே காரணம் என குற்றச்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ராஜ் குந்த்ரா கூறியதாவது, கவிதா, தனது சகோதரியின் கணவர், எனது அம்மா ஆகியோர் லண்டனில் வசித்து வந்தனர். அப்போது எனது சகோதரியின் கணவரும் கவிதாவும் நெருங்கிபழகியுள்ளனர். இதனை என் அம்மா ஒரு முறை கண்டுபிடித்துவிட்டார். இதனால் இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த இணக்கமான உறவு உடைந்ததது.

கவிதா தனது உண்மையான முகத்தை அப்போது வெளிக்கொண்டு வந்தார். அவர், எனது சகோதரியின் கணவருடன் சேர்ந்து என்னை ஏமாற்றினார். கவிதா இப்போது நல்ல இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் செய்த விஷயத்தை மன்னிக்க முடியாது. ஷில்பா, கவிதா கூறியதற்கு மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அவரை நான் சமதானப்படுத்தி வருகிறேன். என்றார்.

நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவா உடன் ‘மிஸ்டர் ரோமியோ’, விஜய்யுடன், 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 2012ஆம் ஆண்டு வியான் என்ற ஆண்குழந்தையும் ஷமிஷா என்ற பெண்குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் ஷில்பா தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். அப்போது ராஜ் குந்தாரவின் முதல் மனைவி கவிதா, தனது கடந்த கால வாழ்க்கை குறித்த நேர்காணலின் பழைய வீடியோவில் இணையத்தில் வெளியிட்டார். அதில், நானும் எனது கணவர் ராஜூம் பிரிவதற்கு ஷில்பா ஷெட்டியே காரணம் என குற்றச்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ராஜ் குந்த்ரா கூறியதாவது, கவிதா, தனது சகோதரியின் கணவர், எனது அம்மா ஆகியோர் லண்டனில் வசித்து வந்தனர். அப்போது எனது சகோதரியின் கணவரும் கவிதாவும் நெருங்கிபழகியுள்ளனர். இதனை என் அம்மா ஒரு முறை கண்டுபிடித்துவிட்டார். இதனால் இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த இணக்கமான உறவு உடைந்ததது.

கவிதா தனது உண்மையான முகத்தை அப்போது வெளிக்கொண்டு வந்தார். அவர், எனது சகோதரியின் கணவருடன் சேர்ந்து என்னை ஏமாற்றினார். கவிதா இப்போது நல்ல இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் செய்த விஷயத்தை மன்னிக்க முடியாது. ஷில்பா, கவிதா கூறியதற்கு மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அவரை நான் சமதானப்படுத்தி வருகிறேன். என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.