ETV Bharat / sitara

சுதந்திர தினத்தில் வலிமையான பெண்களை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா! - 70ஆவது சுதந்திர தினம்

நாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சுதந்திர போராட்டத்தின் போதும், நாட்டை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றி வரலாற்றை உருவாக்கிய பல வலிமையான மற்றும் அச்சமற்ற பெண்களை நடிகை பிரியங்கா சோப்ரா நினைவுகூர்ந்துள்ளார்.

priyanka chopra independence day video priyanka chopra on revolutionary women priyanka chopra i day message celebs i day wishes பிரியங்கா சோப்ரா சுதந்திர தின வாழ்த்து 70ஆவது சுதந்திர தினம் பிரியங்கா காந்தி
priyanka chopra independence day video priyanka chopra on revolutionary women priyanka chopra i day message celebs i day wishes பிரியங்கா சோப்ரா சுதந்திர தின வாழ்த்து 70ஆவது சுதந்திர தினம் பிரியங்கா காந்தி
author img

By

Published : Aug 15, 2020, 2:18 PM IST

டெல்லி: சுதந்திர போராட்டத்தின் போதும், நம் நாட்டை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றி வரலாற்றை உருவாக்கிய தனித்துவமான பங்காற்றிய வலிமையான மற்றும் அச்சமற்ற பெண்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அற்புதமான பெண்களான அம்ரித் கவுர், அருணா ஆசாஃப் அலி, கேப்டன் லட்சுமி சாகல், துர்காவதி தேவி, கமலா நேரு, கனக்லதா பாருவா, கஸ்தூர்பா காந்தி, கிட்டூர் ராணி சென்னம்மா , ஜான்சியின் ராணி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி மற்றும் உதா தேவி ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

அதன் பின்னணியில் 'வந்தே மாதரம், அவர்கள் அரசிகள், அவர்கள் போர் வீராங்கனைகள், அவர்கள் புரட்சியாளர்கள், அவர்கள் தூதர்கள்,, ஆதரவாளர்கள் மற்றும் நிச்சயமாக தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் எண்ணற்ற வலுவான மற்றும் அச்சமற்ற பெண்களைப் பெற்றெடுத்தது.
அவர்கள் ஓவ்வொருவரும் ஒரு தனித்துவமான பங்காற்றினர். அவை ஒவ்வொன்றும் நம் இதயத்திலும் நம் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று அந்த கறுப்பு வெள்ளை வீடியோவின் பின்னணியில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
முன்னதாக, சினிமா துறையின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் மூத்த நடிகர்கள் தர்மேந்திர தியோல், அமிதாப் பச்சன், அனுபம் கெர், புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் 74 வது சுதந்திர தினத்தன்று தங்கள் வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி

டெல்லி: சுதந்திர போராட்டத்தின் போதும், நம் நாட்டை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றி வரலாற்றை உருவாக்கிய தனித்துவமான பங்காற்றிய வலிமையான மற்றும் அச்சமற்ற பெண்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அற்புதமான பெண்களான அம்ரித் கவுர், அருணா ஆசாஃப் அலி, கேப்டன் லட்சுமி சாகல், துர்காவதி தேவி, கமலா நேரு, கனக்லதா பாருவா, கஸ்தூர்பா காந்தி, கிட்டூர் ராணி சென்னம்மா , ஜான்சியின் ராணி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி மற்றும் உதா தேவி ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

அதன் பின்னணியில் 'வந்தே மாதரம், அவர்கள் அரசிகள், அவர்கள் போர் வீராங்கனைகள், அவர்கள் புரட்சியாளர்கள், அவர்கள் தூதர்கள்,, ஆதரவாளர்கள் மற்றும் நிச்சயமாக தலைவர்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் எண்ணற்ற வலுவான மற்றும் அச்சமற்ற பெண்களைப் பெற்றெடுத்தது.
அவர்கள் ஓவ்வொருவரும் ஒரு தனித்துவமான பங்காற்றினர். அவை ஒவ்வொன்றும் நம் இதயத்திலும் நம் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று அந்த கறுப்பு வெள்ளை வீடியோவின் பின்னணியில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
முன்னதாக, சினிமா துறையின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் மூத்த நடிகர்கள் தர்மேந்திர தியோல், அமிதாப் பச்சன், அனுபம் கெர், புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் 74 வது சுதந்திர தினத்தன்று தங்கள் வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.