கடந்த மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து இன்று வரை பல திரைப்பிரபலங்கள் அவரது உயிரிழப்புக்காக இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து சில நடிகர்களுக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது.
ஆனால் சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா சுஷாந்த் தற்கொலை குறித்து எந்த பதிவையும் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவிக்காமல் இருந்தார். சுஷாந்த் தற்கொலை செய்து ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், சுஷாந்துக்காக அங்கிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் வினாயகர், சாய் பாபா ஆகியோரின் சிலைகளுக்கு முன்பு விளக்கு ஒன்று எரியும் புகைப்படத்தை பகிர்ந்து "கடவுளின் பிள்ளை" என்று குறிப்பிட்டிருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சுஷாந்த், அங்கிதா இருவரும் பவித்ரா ரிஷ்தா என்னும் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகினர். அதிலிருந்து ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு பிரிந்துசென்றனர். சுஷாந்த் இறந்தப் பிறகு அவரது குடும்பத்தை அங்கிதா மும்பையிலும், பாட்னாவிலும் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் சுஷாந்த்- வெளியானது ரியாவின் ரகசியம்!