ETV Bharat / science-and-technology

விவசாயத்தை மேம்படுத்தும் சேலம் மாணாக்கர்களின் புதிய கண்டுபிடிப்புகள்!

author img

By

Published : Aug 27, 2020, 2:41 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

வேளாண்மை தொழில் வெற்றிகரமான தொழிலாக மாற்றிட சேலம் தனியார் கல்லூரி மாணவர்கள் நவீன மொபைல் செயலியையும் கருவியையும் உருவாக்கி சாதனைப் படைத்து மத்திய அரசிடமிருந்து ஒரு லட்சம் பரிசு பெற்றுள்ளனர். இது தொடர்பான சிறப்பு செய்தித் தொகுப்பு ...!

விவசாயத்தை மேம்படுத்து தேனி மாணக்கர்களின் புதிய கண்டுப்பிடிப்புகள்...!
விவசாயத்தை மேம்படுத்து தேனி மாணக்கர்களின் புதிய கண்டுப்பிடிப்புகள்...!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற வள்ளுவரின் குரல் வேளாண்மையின் அவசியத்தையும் அதன் பெருமையையும் இன்றளவும் உணர்த்தி உரைத்துச் சொல்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையை மேலும் வலுப்படுத்திட நவீன காலத்திற்கு ஏற்ப புதிய 'மொபைல் செயலியை' உருவாக்கி விவசாயிகளின் தோழனாக விளங்கும் வகையில் தொழிநுட்பப் புரட்சியை சேலம் பொறியியல் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய இளம் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளி உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் மத்திய அரசு 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் திட்டம்' மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்ப திறன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்து அசத்திவருகின்றனர். இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெல்லும் மாணவர்கள் தொழிநுட்ப அறிவில் மிளிரும் புதிய தலைமுறைகளாக இந்தியாவில் வலம் வந்து சிறந்த தொழில் முனைவோராக வளர்ந்துவருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் குழு சார்பில் நடத்தப்படுகிறது.

வன்பொருள், மென்பொருள் என இரண்டு பிரிவுகளில் 344க்கும் மேற்பட்ட நடைமுறை பிரச்னைகளை தீர்வு கண்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற சவால்களை மாணவர்களுக்கு இந்தப் போட்டி மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதில் வேளாண் ஒத்துழைப்பு, உழவர் நலன் சார்ந்த பிரிவுகளில் சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் விவசாயம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பிரச்னைகளின் தீர்வை கண்டுபிடித்து சேலம் அரசு உதவி பெறும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர் புதிய மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளனர்.

செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!
செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!

காற்றின் ஈரப்பதத்தை கருவியின் மூலம் கண்டறிந்து, ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது தானியங்கி மோட்டார் மூலமாக மோட்டாரை இயக்கி, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையிலும் பயிரின் நிறம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு உரங்களை தானியங்கி முறையில் தெளிக்கவும், இந்த பணிகளை செல்போன் மூலம் கண்காணிக்கும் வகையில் மாணவ மாணவியர் உருவாக்கியுள்ள இந்த நவீன செயலி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புதிய செயலியை உருவாக்கிய மாணவிகள் உஷா, வைசாலி கூறுகையில், "விவசாயிகளின் வேளாண்மை சிக்கலை தீர்க்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறோம். இதை உருவாக்க எங்களுக்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது. இந்த மொபைல் செயலி விவசாயிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் இருந்த இடத்திலிருந்து பண்ணை நிலங்கள், வேளாண் நிலங்களில் பயிரிடப்படும் அனைத்து வகையான பயிரின் தேவையை உணர்த்தும் வகையிலும், நீர், உரம் உள்ளிட்ட இடு பொருள்களை எந்தெந்த காலக்கட்டத்தில் வேளாண்மையில் புகுத்தலாம் என்பதையும் விவசாயிகளுக்கு இந்த செயலி உணர்த்தும். இது வைஃபை மூலம் இயங்க கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறோம்" என்றனர்.

செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!
செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!

இது குறித்து பேசிய, அரசு உதவி பெறும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன், "திறமைக்கும் தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அதனை நிறைவேற்றிடும் வகையில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்வி பயின்று முடித்து லட்சக்கணக்கில் வெளிவரும் மாணவர்களுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த தளத்தினை பயன்படுத்தி திறமையான பொறியியல் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது புதிய தலைமுறைகளை உருவாக்கி உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த கண்டுபிடிப்பை போன்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுவினர் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் பெறுவதற்கான கண்டுபிடிப்பை நிகழ்த்தி இந்திய அளவில் முதலிடம் பிடித்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர்.

சேலம் மாணவர்கள்...!
சேலம் மாணவர்கள்...!

இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவர் தினேஷ் கூறுகையில், “நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களுக்கு, தேவையான நீர்ப்பாசனம், பயிர் வேர் பிடிப்பு, பயிர் வளர்ச்சி, தோட்டக்கலை பயிர் முதிர்ச்சி ஆகியவற்றுக்கான தீர்வை காணும் வகையில் எங்களது இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மையில் மிகுந்த உதவியை விவசாயிகளுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்த தண்ணீரைக் கொண்டு நிறைந்த மகசூல் பெறுவதற்கான வழியாக இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது" என்றார்.

சேலம் மாணவர்கள்...!
சேலம் மாணவர்கள்...!

பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகில் கண்டுபிடித்தாலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்காக சேலம் மாணவர்கள் இந்த இரு கண்டுபிடிப்புகளை உருவாக்கிருப்பது பாராட்டுக்குரியதே...!

இதையும் படிங்க....அரசு மருத்துவமனையில் கரோனாவைக் காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறதா?

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற வள்ளுவரின் குரல் வேளாண்மையின் அவசியத்தையும் அதன் பெருமையையும் இன்றளவும் உணர்த்தி உரைத்துச் சொல்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையை மேலும் வலுப்படுத்திட நவீன காலத்திற்கு ஏற்ப புதிய 'மொபைல் செயலியை' உருவாக்கி விவசாயிகளின் தோழனாக விளங்கும் வகையில் தொழிநுட்பப் புரட்சியை சேலம் பொறியியல் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய இளம் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளி உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் மத்திய அரசு 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் திட்டம்' மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்ப திறன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்து அசத்திவருகின்றனர். இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெல்லும் மாணவர்கள் தொழிநுட்ப அறிவில் மிளிரும் புதிய தலைமுறைகளாக இந்தியாவில் வலம் வந்து சிறந்த தொழில் முனைவோராக வளர்ந்துவருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் குழு சார்பில் நடத்தப்படுகிறது.

வன்பொருள், மென்பொருள் என இரண்டு பிரிவுகளில் 344க்கும் மேற்பட்ட நடைமுறை பிரச்னைகளை தீர்வு கண்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற சவால்களை மாணவர்களுக்கு இந்தப் போட்டி மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதில் வேளாண் ஒத்துழைப்பு, உழவர் நலன் சார்ந்த பிரிவுகளில் சேலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் விவசாயம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பிரச்னைகளின் தீர்வை கண்டுபிடித்து சேலம் அரசு உதவி பெறும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர் புதிய மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளனர்.

செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!
செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!

காற்றின் ஈரப்பதத்தை கருவியின் மூலம் கண்டறிந்து, ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது தானியங்கி மோட்டார் மூலமாக மோட்டாரை இயக்கி, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையிலும் பயிரின் நிறம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு உரங்களை தானியங்கி முறையில் தெளிக்கவும், இந்த பணிகளை செல்போன் மூலம் கண்காணிக்கும் வகையில் மாணவ மாணவியர் உருவாக்கியுள்ள இந்த நவீன செயலி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புதிய செயலியை உருவாக்கிய மாணவிகள் உஷா, வைசாலி கூறுகையில், "விவசாயிகளின் வேளாண்மை சிக்கலை தீர்க்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறோம். இதை உருவாக்க எங்களுக்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது. இந்த மொபைல் செயலி விவசாயிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் இருந்த இடத்திலிருந்து பண்ணை நிலங்கள், வேளாண் நிலங்களில் பயிரிடப்படும் அனைத்து வகையான பயிரின் தேவையை உணர்த்தும் வகையிலும், நீர், உரம் உள்ளிட்ட இடு பொருள்களை எந்தெந்த காலக்கட்டத்தில் வேளாண்மையில் புகுத்தலாம் என்பதையும் விவசாயிகளுக்கு இந்த செயலி உணர்த்தும். இது வைஃபை மூலம் இயங்க கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறோம்" என்றனர்.

செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!
செயலி கண்டுப்பிடித்த சேலம் மாணவிகள்....!

இது குறித்து பேசிய, அரசு உதவி பெறும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன், "திறமைக்கும் தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அதனை நிறைவேற்றிடும் வகையில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்வி பயின்று முடித்து லட்சக்கணக்கில் வெளிவரும் மாணவர்களுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த தளத்தினை பயன்படுத்தி திறமையான பொறியியல் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது புதிய தலைமுறைகளை உருவாக்கி உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த கண்டுபிடிப்பை போன்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுவினர் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் பெறுவதற்கான கண்டுபிடிப்பை நிகழ்த்தி இந்திய அளவில் முதலிடம் பிடித்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வென்றுள்ளனர்.

சேலம் மாணவர்கள்...!
சேலம் மாணவர்கள்...!

இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவர் தினேஷ் கூறுகையில், “நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருள்களுக்கு, தேவையான நீர்ப்பாசனம், பயிர் வேர் பிடிப்பு, பயிர் வளர்ச்சி, தோட்டக்கலை பயிர் முதிர்ச்சி ஆகியவற்றுக்கான தீர்வை காணும் வகையில் எங்களது இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மையில் மிகுந்த உதவியை விவசாயிகளுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. குறைந்த தண்ணீரைக் கொண்டு நிறைந்த மகசூல் பெறுவதற்கான வழியாக இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது" என்றார்.

சேலம் மாணவர்கள்...!
சேலம் மாணவர்கள்...!

பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகில் கண்டுபிடித்தாலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்காக சேலம் மாணவர்கள் இந்த இரு கண்டுபிடிப்புகளை உருவாக்கிருப்பது பாராட்டுக்குரியதே...!

இதையும் படிங்க....அரசு மருத்துவமனையில் கரோனாவைக் காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறதா?

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.