ETV Bharat / opinion

கரோனா அச்சுறுத்தல்: இந்தியா பாடம் படிக்க வேண்டும்!

author img

By

Published : Apr 1, 2020, 7:29 PM IST

ஹைதராபாத்: முதல் வளைகுடா போருக்கு முன்னதாக குவைத் மற்றும் ஈராக்கிலிருந்து மிகவும் தேவையான இந்தியத் தொழிலாளர்கள் வெளியேறியதை அந்நாடுகள் விரும்பவில்லை. இந்தியர்கள் மிகவும் தேவைப்படும்போது வெளியேறிவிட்டதாக அந்நாடுகள் புகார் செய்தன. அதன் பின்னர் அந்த சேதத்தை சரிசெய்யவும், மீண்டும் தொழிலாளர்கள் வளைகுடா நாட்டுக்கு திரும்பவும் சிறிது காலம் பிடித்தது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
Covid-19: Impact on Mother India and her Children Abroad Covid-19 Impact on Mother India கரோனா அச்சுறுத்தல் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்

இன்று இந்தியாவிலிருக்கும் அன்னையருக்கும் வெளிநாடுகளில் உள்ள அவரது குழந்தைகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கடியின் விளிம்பில் உள்ளன. ஏனெனில் கரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் 30 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் நிரந்தரமாக இந்தியா வரும்பட்சத்தில் நிலைமை தலைகீழாக மாறக்கூடும். கரோனா வைரஸின் பரவல் நிறுத்தப்பட்டு உலகப் பொருளாதாரம் மீட்கப்படாவிட்டால் இந்தியா தனது கைகளில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். உலகின் பல்வேறு பகுதிகளில் தேசியவாதத்தின் வளர்ச்சியும், சர்வதேச ஒத்துழைப்பும் குறைந்து வருகிறது.

இதனால் இந்தியா வெளி உதவியை அதிகம் நம்பியிருக்க முடியாது. ஏனெனில் சீனாவின் திமிர்பிடித்த அணுகுமுறையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை முடங்கிப்போயுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்க்கும் உறுப்பினர்கள் கூட தன்னைத்தானே காப்பாற்றும் முனைப்பில் முடங்கிபோய் உள்ளனர்.

நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்காக உருவாக்கப்பட்ட தெற்காசிய அமைப்பு (சார்க்), ஜி -20 மற்றும் ஜி -7 உள்ளிட்ட அமைப்புகள் கூட கரோனா வைரஸை எதிர்த்து போராட உறுதியான திட்டங்களை உருவாக்கவில்லை. சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது என்று பெருமைப்படுத்திக்கொண்ட தேசம் கூட கரோனாவினால் கடந்தகால சோதனைகள் மற்றும் இன்னல்களை நினைவுப்படுத்தி பார்க்கிறது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
கரோனா அச்சுறுத்தல்

இது அவர்களின் சொந்த செல்வம், பெருமை உள்ளிட்டவற்றை நொறுக்கியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு வளரத் தொடங்கியதிலிருந்து, வளர்ந்த நாடுகளில் வளமான வசிக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் வளைகுடாவில் வசிக்கும் ஏராளமான தொழிலாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறினர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வருமானம் அதிகமாகும். அந்த வகையில் வருமானம் 30 மில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு ஏராளமாக குடிபெயர்ந்தனர். இதனால் வளமிக்கவர்களாக மாறினர். வளைகுடாப் பிராந்தியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தியர்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் நற்பெயரைக் கருத்தில் கொண்டு வளைகுடா அரசாங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வளர்ந்தன. இந்தியவாழ் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பிரவாசி திவாஸ் மற்றும் பிரவாசி சம்மன் ஆகியவை நிறுவப்பட்டது.

பிரச்சினைகள் எழுந்தாலும், அரசாங்கத்திற்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு இருந்தது. அரசாங்கத்தின் தலையீடு பல்வேறு வழிகளில் மிகவும் உதவியாக இருந்தது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
இந்தியாவில் 21 நாள்கள் லாக்டவுன்

வசதிப்படைத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வளைகுடாவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைச் செய்ததோடு, அரசு வழங்கக்கூடிய சலுகைகளையும் பெற்றனர்.

இவ்வாறான மகிழ்ச்சியான காட்சிகளுக்கு மத்தியில் ஷேக்ஸ்பியரின் வில்லன்கள் போன்று கோவிட்19 வைரஸ் வந்துள்ளது. ஒருவருக்கொருவர் மோதல் ஏற்படுத்தும் வண்ணம் உலகப் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.

இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தவிக்கின்றனர். முதலில் இவர்களை இந்தியா திரும்ப அழைத்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை நாட்டின் கையை மீறி நிற்கிறது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் விரைவாக நாடு திரும்பப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் சொந்த பணத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போதைய பூட்டுதலில் சிக்கியுள்ள மக்களை மீட்டு கொண்டுவருவதும் நாட்டுக்கு சவாலான பணியாகும்.

இந்நிலையில் அனைத்து இந்தியர்களும் தாய்நாடு திரும்பினால் அது நிச்சயம் மிகப்பெரிய பிரச்னையை உருவாகும். கரோனா வைரஸ் (கோவிட்19) மற்றொரு பிரச்னை என்னவென்றால் அது இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் சமூக பரவல் என்பதால் சிலர் வேண்டுமென்றே வெளிநாடுகளிலில் இருந்து திரும்பி வந்தவர்கள் குறித்த தகவல்களை மக்கள் வெளியிடவில்லை.

தற்போதுவரை பெரும்பாலான நோய்த்தொற்றுகள் திரும்பி வருபவர்களுக்கு கண்டறியப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், கேரள முதலமைச்சர் கோவிட் -19 நிலையைப் பற்றி விரிவாக தெரிவிக்கும்போது, ​​வளைகுடா திரும்பியவர்களை புதிய தொற்றுநோய்களுக்கான ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். இவை உண்மைகள் என்றாலும், சிலர் இந்த குணாதிசயத்தால் புண்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு மர்மம் என்னவென்றால் திரும்பி வந்த பலரும் விமானத்தில் ஏறிய பிறகு அறிகுறிகளை உருவாக்கியதாகத் தெரிகிறது. இது நம்பத்தகுந்ததல்ல. ஆனால் சிவில் விமானத் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த சமூக சேவகர் ஒருவரின் கருத்துப்படி, “இப்பகுதியில் பறக்கும் குறைந்த விலை விமானங்களின் மோசமான பராமரிப்பே, இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம். அனைத்து விமானங்களுக்கும் சுத்திகரிப்பு செய்யப்படவில்லை” என்று அவர் கூறுகிறார். இந்தக் கதைக்கு வில்லன்கள் இல்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வர ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவர்களை திரும்ப அழைத்து வர இந்தியாவுக்கும் கடமை உண்டு. இந்தியப் புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு இந்தியாவின் புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மைதான் காரணம்.

எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பி வர வலியுறுத்தினால் அது சாத்தியமாகாது. முதல் வளைகுடா போருக்கு முன்னதாக குவைத் மற்றும் ஈராக்கிலிருந்து மிகவும் தேவையான இந்தியத் தொழிலாளர்கள் வெளியேறியதை அந்நாடுகள் விரும்பவில்லை.

இந்தியர்கள் மிகவும் தேவைப்படும்போது வெளியேறிவிட்டதாக அந்நாடுகள் புகார் செய்தன. அதன் பின்னர் அந்த சேதத்தை சரிசெய்யவும், மீண்டும் தொழிலாளர்கள் வளைகுடா நாட்டுக்கு திரும்பவும் சிறிது காலம் பிடித்தது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
கரோனா நடவடிக்கை

அந்த அனுபவத்திலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டும். இந்திய தொழிலாளர்களுக்கு நல்ல உணவு, தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு இந்தியா அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் சம்பளம் உறுதிசெய்யப்பட்டு பாதுகாப்பான வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் துணைப் புரிய வேண்டும். இது நடக்கும்பட்சத்தில் அவர்கள் சம்மந்தப்பட்ட நாடுகளில் தொடர்வார்கள்.

ஆகவே இந்த நெருக்கடியை சமாளிக்க தற்காலிக திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் கரோனா தொற்று நோய்க்கு தனித்தன்மை உள்ளது. இது மற்ற பிரச்னைகளுடன் ஒப்பிடும் போது இது உயிர் சார்ந்த பிரச்னை. ஆகவே மற்றப் பிரச்னைகள் முக்கியமற்றதாக தோன்றும்.

ஏனெனில் சுருக்கமான கூறினால் இது தற்கொலை, கொலை போன்றது. அதாவது கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவரும் அவருடன் தொடர்பிலிருந்தவரும் இறக்கின்றனர். இந்த நோய்த்தொற்றுவிலிருந்து யார் தப்பிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இந்த இக்கட்டான சூழலில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை காப்பது நமது கடமையாகும். ஆகவே அரசு வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வடிவமைக்க வேண்டும். ஏனெனில் இந்தியர்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். ஆனால் அவர்களிடமிருந்து இந்தியாவை பிரிக்க முடியாது!

இதையும் படிங்க: மீண்டெழுகிறதா கரோனா? விஞ்ஞானிகளின் கழுகுப் பார்வையில் சீனா!

இன்று இந்தியாவிலிருக்கும் அன்னையருக்கும் வெளிநாடுகளில் உள்ள அவரது குழந்தைகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கடியின் விளிம்பில் உள்ளன. ஏனெனில் கரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் 30 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் நிரந்தரமாக இந்தியா வரும்பட்சத்தில் நிலைமை தலைகீழாக மாறக்கூடும். கரோனா வைரஸின் பரவல் நிறுத்தப்பட்டு உலகப் பொருளாதாரம் மீட்கப்படாவிட்டால் இந்தியா தனது கைகளில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். உலகின் பல்வேறு பகுதிகளில் தேசியவாதத்தின் வளர்ச்சியும், சர்வதேச ஒத்துழைப்பும் குறைந்து வருகிறது.

இதனால் இந்தியா வெளி உதவியை அதிகம் நம்பியிருக்க முடியாது. ஏனெனில் சீனாவின் திமிர்பிடித்த அணுகுமுறையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை முடங்கிப்போயுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்க்கும் உறுப்பினர்கள் கூட தன்னைத்தானே காப்பாற்றும் முனைப்பில் முடங்கிபோய் உள்ளனர்.

நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்காக உருவாக்கப்பட்ட தெற்காசிய அமைப்பு (சார்க்), ஜி -20 மற்றும் ஜி -7 உள்ளிட்ட அமைப்புகள் கூட கரோனா வைரஸை எதிர்த்து போராட உறுதியான திட்டங்களை உருவாக்கவில்லை. சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது என்று பெருமைப்படுத்திக்கொண்ட தேசம் கூட கரோனாவினால் கடந்தகால சோதனைகள் மற்றும் இன்னல்களை நினைவுப்படுத்தி பார்க்கிறது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
கரோனா அச்சுறுத்தல்

இது அவர்களின் சொந்த செல்வம், பெருமை உள்ளிட்டவற்றை நொறுக்கியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு வளரத் தொடங்கியதிலிருந்து, வளர்ந்த நாடுகளில் வளமான வசிக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் வளைகுடாவில் வசிக்கும் ஏராளமான தொழிலாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறினர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வருமானம் அதிகமாகும். அந்த வகையில் வருமானம் 30 மில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு ஏராளமாக குடிபெயர்ந்தனர். இதனால் வளமிக்கவர்களாக மாறினர். வளைகுடாப் பிராந்தியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தியர்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் நற்பெயரைக் கருத்தில் கொண்டு வளைகுடா அரசாங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வளர்ந்தன. இந்தியவாழ் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பிரவாசி திவாஸ் மற்றும் பிரவாசி சம்மன் ஆகியவை நிறுவப்பட்டது.

பிரச்சினைகள் எழுந்தாலும், அரசாங்கத்திற்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு இருந்தது. அரசாங்கத்தின் தலையீடு பல்வேறு வழிகளில் மிகவும் உதவியாக இருந்தது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
இந்தியாவில் 21 நாள்கள் லாக்டவுன்

வசதிப்படைத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வளைகுடாவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைச் செய்ததோடு, அரசு வழங்கக்கூடிய சலுகைகளையும் பெற்றனர்.

இவ்வாறான மகிழ்ச்சியான காட்சிகளுக்கு மத்தியில் ஷேக்ஸ்பியரின் வில்லன்கள் போன்று கோவிட்19 வைரஸ் வந்துள்ளது. ஒருவருக்கொருவர் மோதல் ஏற்படுத்தும் வண்ணம் உலகப் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.

இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தவிக்கின்றனர். முதலில் இவர்களை இந்தியா திரும்ப அழைத்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை நாட்டின் கையை மீறி நிற்கிறது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் விரைவாக நாடு திரும்பப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் சொந்த பணத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போதைய பூட்டுதலில் சிக்கியுள்ள மக்களை மீட்டு கொண்டுவருவதும் நாட்டுக்கு சவாலான பணியாகும்.

இந்நிலையில் அனைத்து இந்தியர்களும் தாய்நாடு திரும்பினால் அது நிச்சயம் மிகப்பெரிய பிரச்னையை உருவாகும். கரோனா வைரஸ் (கோவிட்19) மற்றொரு பிரச்னை என்னவென்றால் அது இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் சமூக பரவல் என்பதால் சிலர் வேண்டுமென்றே வெளிநாடுகளிலில் இருந்து திரும்பி வந்தவர்கள் குறித்த தகவல்களை மக்கள் வெளியிடவில்லை.

தற்போதுவரை பெரும்பாலான நோய்த்தொற்றுகள் திரும்பி வருபவர்களுக்கு கண்டறியப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், கேரள முதலமைச்சர் கோவிட் -19 நிலையைப் பற்றி விரிவாக தெரிவிக்கும்போது, ​​வளைகுடா திரும்பியவர்களை புதிய தொற்றுநோய்களுக்கான ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். இவை உண்மைகள் என்றாலும், சிலர் இந்த குணாதிசயத்தால் புண்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு மர்மம் என்னவென்றால் திரும்பி வந்த பலரும் விமானத்தில் ஏறிய பிறகு அறிகுறிகளை உருவாக்கியதாகத் தெரிகிறது. இது நம்பத்தகுந்ததல்ல. ஆனால் சிவில் விமானத் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த சமூக சேவகர் ஒருவரின் கருத்துப்படி, “இப்பகுதியில் பறக்கும் குறைந்த விலை விமானங்களின் மோசமான பராமரிப்பே, இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம். அனைத்து விமானங்களுக்கும் சுத்திகரிப்பு செய்யப்படவில்லை” என்று அவர் கூறுகிறார். இந்தக் கதைக்கு வில்லன்கள் இல்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வர ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவர்களை திரும்ப அழைத்து வர இந்தியாவுக்கும் கடமை உண்டு. இந்தியப் புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு இந்தியாவின் புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மைதான் காரணம்.

எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பி வர வலியுறுத்தினால் அது சாத்தியமாகாது. முதல் வளைகுடா போருக்கு முன்னதாக குவைத் மற்றும் ஈராக்கிலிருந்து மிகவும் தேவையான இந்தியத் தொழிலாளர்கள் வெளியேறியதை அந்நாடுகள் விரும்பவில்லை.

இந்தியர்கள் மிகவும் தேவைப்படும்போது வெளியேறிவிட்டதாக அந்நாடுகள் புகார் செய்தன. அதன் பின்னர் அந்த சேதத்தை சரிசெய்யவும், மீண்டும் தொழிலாளர்கள் வளைகுடா நாட்டுக்கு திரும்பவும் சிறிது காலம் பிடித்தது.

Covid-19: Impact on Mother India and her Children Abroad  Covid-19  Impact on Mother India  கரோனா அச்சுறுத்தல்  வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், கரோனா, வளைகுடா போர், அயலக உறவுகள்
கரோனா நடவடிக்கை

அந்த அனுபவத்திலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டும். இந்திய தொழிலாளர்களுக்கு நல்ல உணவு, தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு இந்தியா அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் சம்பளம் உறுதிசெய்யப்பட்டு பாதுகாப்பான வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் துணைப் புரிய வேண்டும். இது நடக்கும்பட்சத்தில் அவர்கள் சம்மந்தப்பட்ட நாடுகளில் தொடர்வார்கள்.

ஆகவே இந்த நெருக்கடியை சமாளிக்க தற்காலிக திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் கரோனா தொற்று நோய்க்கு தனித்தன்மை உள்ளது. இது மற்ற பிரச்னைகளுடன் ஒப்பிடும் போது இது உயிர் சார்ந்த பிரச்னை. ஆகவே மற்றப் பிரச்னைகள் முக்கியமற்றதாக தோன்றும்.

ஏனெனில் சுருக்கமான கூறினால் இது தற்கொலை, கொலை போன்றது. அதாவது கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவரும் அவருடன் தொடர்பிலிருந்தவரும் இறக்கின்றனர். இந்த நோய்த்தொற்றுவிலிருந்து யார் தப்பிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இந்த இக்கட்டான சூழலில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை காப்பது நமது கடமையாகும். ஆகவே அரசு வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வடிவமைக்க வேண்டும். ஏனெனில் இந்தியர்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம். ஆனால் அவர்களிடமிருந்து இந்தியாவை பிரிக்க முடியாது!

இதையும் படிங்க: மீண்டெழுகிறதா கரோனா? விஞ்ஞானிகளின் கழுகுப் பார்வையில் சீனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.