ETV Bharat / jagte-raho

கல்லூரி மாணவர் கொலை: திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது!

author img

By

Published : Apr 8, 2020, 4:03 PM IST

விருதுநகர்: முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக திமுக ஒன்றிய கவுன்சிலர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர் கொலை: திமுக கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது!
கல்லூரி மாணவர் கொலை: திமுக கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் தாமரைக்கனி. இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி கணேஷ் மகன் கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே தாமரைக்கனியின் நண்பன் கருப்பசாமிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பேண்ட் செட் (ட்ரம்ஸ்) புக்கிங் அப்பகுதியில் பேண்ட் செட் இசைக்குழு வைத்துள்ள கணபதி சங்கர், கணேஷ் குமார், செந்தில் குமார் ஆகியோரை நாடாமல் வேறொரு இசைக் குழுவை நாடியுள்ளனர். ஏற்கனவே தாமரைகனிக்கும் கணபதி சங்கருக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையில், இவர்களை புக்கிங் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் வேறு ஒரு பேண்ட் செட் குழுவை ஏற்பாடு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியில், ட்ரம்செட் முன் ஆடி சென்ற பொழுது கணபதி சங்கருக்கும், தாமரைக்கனிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதை உடனடியாக ஊர் பொதுமக்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை தாமரைக்கனி தனது நண்பரைக் காண சென்ற பொழுது கணபதி சங்கரும் அவரது உறவினர்களும் சேர்ந்து தாமரைக்கனியை அடித்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தாமரைக்கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் தாமரைக்கனி வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர், தாமரைக்கனியை கொலை செய்த கணபதி சங்கர், அவரது தந்தை சக்தி கணேஷ், கணேஷ் குமார், செந்தில்குமார், இவரது தந்தை அண்ணாமலை ஈஸ்வரன் (திமுக ஒன்றியக் கவுன்சிலர்), மேலும் ஜெய் கணேஷ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரணன் மகன் தாமரைக்கனி. இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி கணேஷ் மகன் கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே தாமரைக்கனியின் நண்பன் கருப்பசாமிக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பேண்ட் செட் (ட்ரம்ஸ்) புக்கிங் அப்பகுதியில் பேண்ட் செட் இசைக்குழு வைத்துள்ள கணபதி சங்கர், கணேஷ் குமார், செந்தில் குமார் ஆகியோரை நாடாமல் வேறொரு இசைக் குழுவை நாடியுள்ளனர். ஏற்கனவே தாமரைகனிக்கும் கணபதி சங்கருக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையில், இவர்களை புக்கிங் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் வேறு ஒரு பேண்ட் செட் குழுவை ஏற்பாடு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியில், ட்ரம்செட் முன் ஆடி சென்ற பொழுது கணபதி சங்கருக்கும், தாமரைக்கனிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதை உடனடியாக ஊர் பொதுமக்கள் சேர்ந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை தாமரைக்கனி தனது நண்பரைக் காண சென்ற பொழுது கணபதி சங்கரும் அவரது உறவினர்களும் சேர்ந்து தாமரைக்கனியை அடித்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தாமரைக்கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் தாமரைக்கனி வழியிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர், தாமரைக்கனியை கொலை செய்த கணபதி சங்கர், அவரது தந்தை சக்தி கணேஷ், கணேஷ் குமார், செந்தில்குமார், இவரது தந்தை அண்ணாமலை ஈஸ்வரன் (திமுக ஒன்றியக் கவுன்சிலர்), மேலும் ஜெய் கணேஷ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.