ETV Bharat / jagte-raho

அண்ணியின் திருமணம் மீறிய உறவை தட்டிக்கேட்ட கொழுந்தன் குத்தி கொலை! - அண்ணன் மனைவியுடன் வாலிபருக்கு தகாத உறவு

திருச்சி: அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறி உறவு கொண்டிருந்த நபரை கண்டித்த கொழுந்தன் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட முரளி
கொலை செய்யப்பட்ட முரளி
author img

By

Published : Mar 4, 2020, 3:58 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள முள்ளால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, சுதா தம்பதி. சுதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுதாவை பார்க்க வசந்த் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதை கவனித்த பிரபுவின் தம்பி முரளி நேற்று மாலை வசந்தை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்து அலறிய முரளியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட முரளி
கொலை செய்யப்பட்ட முரளி

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து போர்த்துபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்த கல்லக்குடி காவல் துறையினர் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வசந்த்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

காதலியின் கணவனை கொலை செய்த திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் தலைமறைவு - திருமங்கலம் அருகே பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள முள்ளால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, சுதா தம்பதி. சுதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுதாவை பார்க்க வசந்த் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதை கவனித்த பிரபுவின் தம்பி முரளி நேற்று மாலை வசந்தை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்து அலறிய முரளியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட முரளி
கொலை செய்யப்பட்ட முரளி

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து போர்த்துபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்த கல்லக்குடி காவல் துறையினர் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வசந்த்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

காதலியின் கணவனை கொலை செய்த திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் தலைமறைவு - திருமங்கலம் அருகே பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.