ETV Bharat / jagte-raho

கஞ்சா விற்பனை - மூவர் கைது!

சென்னை: அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Dec 24, 2019, 6:56 PM IST

arrest
arrest

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும், 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், சஞ்சனா, கீதா ஆகிய இரு திருநங்கைகளும் கடந்த மாதம் வடபழனியில் 30 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு, வடபழனி காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும், 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், சஞ்சனா, கீதா ஆகிய இரு திருநங்கைகளும் கடந்த மாதம் வடபழனியில் 30 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு, வடபழனி காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Intro:Body:*கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது!*

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் அயனாவரத்தை சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் ரூபாய் 65 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் விசாரணையில் சஞ்சனா, கீதா என்ற இரண்டு திருநங்கைகளும் கடந்த மாதம் வடபழனியில் ரூபாய் 30 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு வடபழனி காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவாக இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.

வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்கள் மூவரையும் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.