ETV Bharat / jagte-raho

சென்னையில் ரவுடி கடத்தி கொலை!

author img

By

Published : Jan 20, 2020, 6:04 PM IST

சென்னை: ரவுடியை அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகவுள்ள 8 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

murder
murder

நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் ராம்குமார் (24). திருவல்லிக்கேணியில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ராம்குமார் குடிபோதையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவரை பாட்டிலால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஐஸ் அவுஸ் காவல்துறையினர் அவரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் ராம்குமார் நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் ராம்குமார் நிகழ்விடத்திலேயே மயங்கியுள்ளார். பின்னர் அக்கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றது. இது தொடர்பாக ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி கொடுத்தப் புகாரின் பேரில், ஐஸ் அவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்பு, ஜெகன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹீம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகியோர் ராம்குமாரை கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் ஆட்டோவில் கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் உடலை காவலர்கள் கண்டெடுத்தனர். இக்கொலையில் தொடர்புடைய, பிரேம் குமார் உள்ளிட்ட 8 பேரை ஐஸ் அவுஸ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறு: தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் ராம்குமார் (24). திருவல்லிக்கேணியில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ராம்குமார் குடிபோதையில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவரை பாட்டிலால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஐஸ் அவுஸ் காவல்துறையினர் அவரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் ராம்குமார் நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் ராம்குமார் நிகழ்விடத்திலேயே மயங்கியுள்ளார். பின்னர் அக்கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றது. இது தொடர்பாக ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி கொடுத்தப் புகாரின் பேரில், ஐஸ் அவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்பு, ஜெகன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹீம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகியோர் ராம்குமாரை கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் ஆட்டோவில் கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் உடலை காவலர்கள் கண்டெடுத்தனர். இக்கொலையில் தொடர்புடைய, பிரேம் குமார் உள்ளிட்ட 8 பேரை ஐஸ் அவுஸ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறு: தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

Intro:Body:சென்னையில் ரவுடி கடத்தி கொலை.3பேர் கைது 8பேர் தலைமறைவு.

சென்னை நீலாங்கரை வெட்டுவாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி 54 இவரது மகம் ராம்குமார் 24 திருவல்லிக்கேணி பி.பி குளத்தில் தங்கி ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 15ஆம் தேதி நடுகுப்பத்தை சேர்ந்த பிரேம் குமார் 25 என்பவரை குடிப்போதையில் ராம்குமார் பாட்டிலால் கழுத்தில் குத்தியுள்ளார்.இதில் ஏற்பட்ட காயம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிலிச்சை பெற்று வந்தார்.இது தொடர்பாக ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த ராம்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கு ஆட்டோவில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் வந்து ராம்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டுயுள்ளனர்.இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளார்.பின்னர் இதே கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்றனர். இது தொடர்பாக ராம் குமாரின் தந்தை குருமூர்த்தி ஐஸ் அவுஸ் போலீசாரிடம் புகார் அளித்தார்.இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலிசார் வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணியை சேர்ந்த அப்பு24,ஜெகன்(29),ஆட்டோ டிரைவர் அருண் 30 ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம் குமார் 25,சிவமணி, அப்துல் ரஹீம்,அஸ்மத்,சுபான்,கார்த்திக்,ரஞ்சித்,வினோத் ஆகியோர் ராம்குமாரை வெட்டி அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது.

மேலும் பிடிப்பட்ட நபர் அளித்த தகவலின் பேரில் கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.இக்கொலை வழக்கு தலைமறைவாக உள்ள பிரேம் குமார் உள்ளிட்ட 8பேரை ஐஸ் அவுஸ் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.