ETV Bharat / jagte-raho

மாமியார் மருமகள் தகராறு: மகனை கொலைசெய்த தாய்!

author img

By

Published : Jun 11, 2020, 10:16 AM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் மகனை கொலைசெய்த தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மகனை கொண்ற தாய் தற்கொலை முயற்சி
மகனை கொலைசெய்த தாய்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். இவரது கணவர் இட்டாலியில் பணிபுரிந்துவருகிறார். இந்த தம்பதிக்கு அரஷ்பிரீத் சிங் என்னும் 6 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில், குல்விந்தர் கவுருக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றும் இவர்களிடையே தகராறு. குல்விந்தரின் மகன் அவரது பாட்டியை அதிகம் நேசித்துவந்துள்ளார்.

தகராறால் ஆத்திரமடைந்த குல்விந்தர், கத்தியால் மகனை குத்திக் கொலைசெய்துவிட்டு தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். இவரது கணவர் இட்டாலியில் பணிபுரிந்துவருகிறார். இந்த தம்பதிக்கு அரஷ்பிரீத் சிங் என்னும் 6 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில், குல்விந்தர் கவுருக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றும் இவர்களிடையே தகராறு. குல்விந்தரின் மகன் அவரது பாட்டியை அதிகம் நேசித்துவந்துள்ளார்.

தகராறால் ஆத்திரமடைந்த குல்விந்தர், கத்தியால் மகனை குத்திக் கொலைசெய்துவிட்டு தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.