ETV Bharat / jagte-raho

தற்கொலையில் புதுச்சேரி இரண்டாமிடம்!

author img

By

Published : Jan 11, 2020, 6:13 PM IST

புதுச்சேரி: 2018 ஆம் ஆண்டின் தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அறிக்கைப்படி தற்கொலைகள் நடப்பதில் புதுச்சேரி மாநிலம் இரண்டாமிடத்தில் இருப்பதாக இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

app
app

புதுச்சேரி இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து, இந்தியாவில் முதல் ’இளையோர் உதவி எண் கைபேசி செயலி’யை இன்று வெளியிட்டது. இதனை புதுச்சேரி தலைமைப் போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் மற்றும் மனநல மருத்துவர் பாலன், பேராசிரியர் ஜெயின் ஆகியோர் வெளியிட்டனர். இதில், புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிறுவனர் சிவா மதியழகன்,
”புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, புதுச்சேரி மாநிலம் நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 50 விழுக்காட்டிற்கு மேல் இதில் பாதிக்கப்படுவோர் 14 முதல் 35 வயதுடைய இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு மது உள்ளிட்டவைகளும் ஒருவகை காரணியாக அமைந்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. இது தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து, பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் மனநல ஆலோசனைகள், கல்விக்கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டி, வேலைவாய்ப்பு உதவி மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன “ என்றார்.

புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

புதுச்சேரி இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து, இந்தியாவில் முதல் ’இளையோர் உதவி எண் கைபேசி செயலி’யை இன்று வெளியிட்டது. இதனை புதுச்சேரி தலைமைப் போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் மற்றும் மனநல மருத்துவர் பாலன், பேராசிரியர் ஜெயின் ஆகியோர் வெளியிட்டனர். இதில், புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிறுவனர் சிவா மதியழகன்,
”புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, புதுச்சேரி மாநிலம் நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 50 விழுக்காட்டிற்கு மேல் இதில் பாதிக்கப்படுவோர் 14 முதல் 35 வயதுடைய இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு மது உள்ளிட்டவைகளும் ஒருவகை காரணியாக அமைந்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் கடந்த 2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. இது தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து, பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் மனநல ஆலோசனைகள், கல்விக்கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டி, வேலைவாய்ப்பு உதவி மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன “ என்றார்.

புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

Intro: தேசிய குற்றப்பதிவு பணியகம் 2018ம் ஆண்டின் அறிக்கைப்படி புதுச்சேரி தற்கொலைகள் இரண்டாம் இடத்திலும் இருந்து வருவதாக இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் தெரிவித்துள்ளது


Body:புதுச்சேரி இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து இந்தியாவில் முதல் இளையோர் உதவி எண் கைபேசி செயலி இன்று வெளியிட்டது தேவையிலும் ஆபத்தின் விளிம்பில் உள்ள இளைஞர்களுக்க கைபேசி செயலி யாகும்

இதனை புதுச்சேரி தலைமை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் மற்றும் மனநல மருத்துவர் பாலன் பேராசிரியர் ஜெயின் ஆகியோர் செயலியை வெளியிட்டனர்

இதில் புதுச்சேரி சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் நிறுவனர் சிவா மதியழகன்...
புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும் தேசிய குற்றப்பதிவு பணியகம் 2018ம் ஆண்டின் அறிக்கையின்படி புதுச்சேரி நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடத்திலும் உள்ளது என்ற அவர் அதே அறிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டோர் 14 வயது முதல் 35 வயது உடைய இளைஞர்களே இருக்கிறார்கள் என்றார் புதுச்சேரியில் கடந்தசில ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் தற்கொலையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் இதற்கு புதுவையில் மது உள்ளிட்ட போதைப் பொருளும் ஒருவகை காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார் நெருக்கடியில் சிக்கியுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து துவக்கப்பட்டுள்ளது இது தற்கொலைக்கான காரணங்களை பல்வேறு வகையான சேவைகளை என்ஜிஓ அமைப்பு செய்து வருகிறது அதில் மனநல ஆலோசனைக் ,கல்விக்கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டி, வேலைவாய்ப்பு உதவி பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் வழங்கப்படுகிறது என்றார்

முக்கிய குறிக்கோள் புதுவையில் பூஜை இளையோர் தற்கொலை கொண்டுவர 2030-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவது என்றார்

இந்த இளையோர் தற்கொலை எண்ணிக்கையில் புதுச்சேரி பொது சுகாதாரத்துக்கு பாதகமாக உள்ளது இந்த கைபேசி செயலி மூலம் புதுச்சேரி இளையோரின் சுமார் ஐந்து லட்சம் புதுவை இளையோரை 2020ம் ஆண்டில் அடைய திட்டமிட்டுள்ளது அவர்கள் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் ஆலோசனை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்






Conclusion:தேசிய குற்றப்பதிவு பணியகம் 2018ம் ஆண்டின் அறிக்கைப்படி புதுச்சேரி தற்கொலைகள் இரண்டாம் இடத்திலும் இருந்து வருவதாக இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் தெரிவித்துள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.