ETV Bharat / jagte-raho

நடமாடும் பார் ஆன ஆட்டோ - வைரல் வீடியோவால் ஓட்டுநர் கைது! - Pollachi

கோவை:பொள்ளாச்சியில் ஆட்டோவில் பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது. இதில் பங்கெடுத்த ஆட்டோ ஓட்டுனரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Pollachi Police Action
author img

By

Published : Oct 8, 2019, 12:03 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அந்த மதுபானக்கடை முன்பு ஆட்டோவில் முன் சீட்டில் உட்கார்ந்து ஒரு ஆணும், பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் பெண் ஒருவரும் பட்டப்பகலில் பீர் பாட்டில் வைத்து குடிக்கும் வாட்ஸ்அப் வீடியோ வைரலாக பரவியது.

Pollachi Drinking Viral Video auto Driver Arrest
மது அருந்த பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல்

சமூகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, மினி ஆட்டோ பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அது வடுகபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவில் வந்த பெண் கெளசல்யா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும்; கணவரைப் பார்க்க வந்த போது கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோவில் மது அருந்தியதும், புகை பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

வைரல் வீடியோ ஆட்டோ ஓட்டுனர் கைது

மேலும் பொது இடத்தில் மது, புகை பிடிக்க அனுமதித்த குற்றத்திற்காக காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து செல்வ குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அந்த மதுபானக்கடை முன்பு ஆட்டோவில் முன் சீட்டில் உட்கார்ந்து ஒரு ஆணும், பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் பெண் ஒருவரும் பட்டப்பகலில் பீர் பாட்டில் வைத்து குடிக்கும் வாட்ஸ்அப் வீடியோ வைரலாக பரவியது.

Pollachi Drinking Viral Video auto Driver Arrest
மது அருந்த பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல்

சமூகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, மினி ஆட்டோ பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அது வடுகபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவில் வந்த பெண் கெளசல்யா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும்; கணவரைப் பார்க்க வந்த போது கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோவில் மது அருந்தியதும், புகை பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

வைரல் வீடியோ ஆட்டோ ஓட்டுனர் கைது

மேலும் பொது இடத்தில் மது, புகை பிடிக்க அனுமதித்த குற்றத்திற்காக காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து செல்வ குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:arrestBody:arrestConclusion:பொள்ளாச்சியில் ஆட்டோவில் பெண் ஒருவர் மது அருந்தும் வாட்ஸ் ஆப் வைரல் வீடியோ, ஆட்டோ ஓட்டுனர் கைது செய்து போலீசார் விசாரனை . பொள்ளாச்சி- 7பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள அரசு மதுபானகடை முன்பு ஆட்டோவில் முன் சீட்டில்ஒரு ஆணும், பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் பெண் ஒருவர் பட்டபகலில் பீர் பாட்டில் வைத்து குடிக்கும் வாட்ஸ் அப் வீடியோவைரலாக பரவுகிறது. சமூகத்தில் ஆட்டோ ஒட்டுனர்கள்பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி இன்று மினி ஆட்டோ பார்ராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர், மேலும் காவல்துறையினர் இது போன்று செயல் நடக்காமல் இருக்க ஆட்டோ ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் தெரிவித்தனர். இச்சபவம் குறித்து கோவை மாவட்டகாவல்த்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் மேற்க்கு காவல் நிலையாபோலீசார் விசாரனை மேற்கொண்டனர், விசாரனையில் ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார், வடுகாபாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரி வந்தது, இதையடுத்து ஆட்டோவில் வந்த பெண் கெளசல்யா, ஹைதரபாத்தை சேர்ந்தவர், கணவர் ரைபார்க்க வந்த போது கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோவில் மது அருந்தியதும், புகை பிடித்ததும் விசாரனையில் தெரிய வந்தது மேலும் பொது இடத்தில் மது மற்றும் புகை பிடிக்க அனுமதித்த குற்றத்திற்க்காக ஆட்டோவை பறிமுதல் செய்து செல்வகுமார்ரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.