ETV Bharat / jagte-raho

நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!

author img

By

Published : Oct 20, 2020, 1:53 PM IST

சென்னை: கணக்கில் வராத 14.36 லட்சம் ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் செலுத்த முயன்ற நபர்களை பிடித்து ஹவாலா பணமா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

rupees
rupees

திருவல்லிக்கேணியில் நேற்றிரவு காவல் துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகேயுள்ள, ஆசியன் லாஜிஸ்டிக்ஸ் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து அவர்கள் விசாரித்தனர். அவரிடம் சோதனை செய்த போது கணக்கில் வராத, 14 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அதை ஏடிஎம் மூலமாக தன் கணக்கில் செலுத்த முயன்றதும் தெரிய வந்தது.

பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, நாங்குநேரியைச் சேர்ந்த சையது சலாவுதீன் என்பது தெரிந்தது. மேலும், ஐஸ் ஹவுஸ் பகுதி லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சலாவுதீனின் நண்பர்களான மொய்தீன் சஃபீக், மொய்தீன் ரியாஸ், அப்துல் அஜீஸ் ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!
நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!

பறிமுதல் செய்யப்பட்ட 14.36 லட்ச ரூபாய் பணம் ஹவாலா பணமா எனவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் உண்டியல் உடைப்பு: பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்!

திருவல்லிக்கேணியில் நேற்றிரவு காவல் துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகேயுள்ள, ஆசியன் லாஜிஸ்டிக்ஸ் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து அவர்கள் விசாரித்தனர். அவரிடம் சோதனை செய்த போது கணக்கில் வராத, 14 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அதை ஏடிஎம் மூலமாக தன் கணக்கில் செலுத்த முயன்றதும் தெரிய வந்தது.

பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, நாங்குநேரியைச் சேர்ந்த சையது சலாவுதீன் என்பது தெரிந்தது. மேலும், ஐஸ் ஹவுஸ் பகுதி லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சலாவுதீனின் நண்பர்களான மொய்தீன் சஃபீக், மொய்தீன் ரியாஸ், அப்துல் அஜீஸ் ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!
நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!

பறிமுதல் செய்யப்பட்ட 14.36 லட்ச ரூபாய் பணம் ஹவாலா பணமா எனவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் உண்டியல் உடைப்பு: பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.