ETV Bharat / jagte-raho

சிறுமிக்கு பாலியல் தொல்லை - நையப்புடைத்த பொதுமக்கள்!

author img

By

Published : Oct 15, 2020, 9:29 PM IST

கன்னியாகுமரி: வீட்டருகே நின்று கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் 15 வயது சிறுமி, தன் வீட்டை ஒட்டியப் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கிடையே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து, கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

பின்னர் விசாரணையில், அவர் தாழக்குடி பகுதியைச் சேர்ந்த குமார் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க; ஐடி நிறுவன தலைமை அலுவலர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் 15 வயது சிறுமி, தன் வீட்டை ஒட்டியப் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கிடையே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து, கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

பின்னர் விசாரணையில், அவர் தாழக்குடி பகுதியைச் சேர்ந்த குமார் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க; ஐடி நிறுவன தலைமை அலுவலர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.