கன்னியாகுமரி: பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள காசி மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவர் மீது புகார் அளித்தபோது தான், காசி அரங்கேற்றிய காதல் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது அவர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளார்.
![one more case filed against nagercoil kasi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-knk-02-kasi-case-cbcid-enquiry-image-7203868_07112020113304_0711f_1604728984_402.jpg)