ETV Bharat / jagte-raho

ரத்த வெள்ளத்தில் ஆண் உடல்: காவல் துறை விசாரணை

author img

By

Published : Jun 8, 2020, 1:25 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் காந்திநகரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் உடல் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கொலை
கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த தென்னேரி பகுதியில் வசித்துவரும் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ரவி. இவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்திநகர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால் காந்திநகரில், தான் குடியிருந்த வீட்டில் ரவி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, ரவி 15 நாள்களுக்கு மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் தொடர்ந்து மது அருந்திவந்ததாகவும், இதனால் நிலை தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்துள்ளார் என கூறியுள்ளனர்.

ஆனால் காவல் துறையினர் கொலையா? அல்லது குடிபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரவி இறந்தாரா என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த தென்னேரி பகுதியில் வசித்துவரும் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ரவி. இவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்திநகர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால் காந்திநகரில், தான் குடியிருந்த வீட்டில் ரவி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, ரவி 15 நாள்களுக்கு மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் தொடர்ந்து மது அருந்திவந்ததாகவும், இதனால் நிலை தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்துள்ளார் என கூறியுள்ளனர்.

ஆனால் காவல் துறையினர் கொலையா? அல்லது குடிபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரவி இறந்தாரா என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.