ETV Bharat / jagte-raho

இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை: பொதுமக்கள் சாலைமறியல் - kanja sales at the night time in nagai

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் இரவு நேரங்களில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

kanja sales
kanja sales
author img

By

Published : Jan 4, 2020, 2:20 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள கிட்டப்பா நகரில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவதாகக் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் இரவில் கஞ்சா அடித்துவிட்டு சமூகவிரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாகச் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

kanja sales

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள கிட்டப்பா நகரில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவதாகக் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் இரவில் கஞ்சா அடித்துவிட்டு சமூகவிரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுவதாகச் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

kanja sales

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த மயிலாடுதுறை காவல் துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

Intro:மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்: -Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள கிட்டப்பா நகரில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெறுவதால் இரவில் கஞ்சா அடித்துவிட்டு தகாத செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர.; இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர.; இங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதால் குடியிருப்புவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் பெருமளவில் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் உடன் நடவடிக்கை எடுக்க கோரினர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.