ETV Bharat / jagte-raho

தலை வெட்டப்பட்ட மனைவியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவன்! - தலை வெட்டப்பட்ட மனைவியில் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவன்

ஈரோடு: பெருந்துறையில் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட மனைவியின் தலையை துண்டாக அறுத்து, உடலை மட்டும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலை வெட்டப்பட்ட மனைவியில் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவன்
author img

By

Published : Apr 16, 2019, 10:59 PM IST

பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (28), இவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா நகரைச் சேர்ந்தவர். இதே ஊரைச் சேர்ந்த நிவேதா(19) என்பவரைக் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திண்டல் அருகே வேப்பம் பாளையத்தில் குடியிருந்து வந்துள்ளனர். முனியப்பன் லாரிகளுக்கு கேஸ் உருளை ஏற்றும் ஊழியராகவும், இவரது மனைவி கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு உறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன் நிவேதாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோபத்தின் உச்சத்திலிருந்த முனியப்பன் நிவேதிதாவைக் கீழே தள்ளி கழுத்தைத் துண்டாக அறுத்துள்ளார்.

பின்னர் தலையைத் தனியே எடுத்து இருசக்கர வாகனத்தின் முன்புறம் பையில் வைத்து விட்டு, உடலை பெட்ரோல் டேங்கின் மீது வைத்து அருகே உள்ள வாய்க்காலில் வீசுவதற்காகக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிலைதடுமாறி அவ்வழியிலிருந்த வீட்டுச் சுவரின் மீது மோதி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதைக் கவனிக்க, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். மேலும் நிவேதாவின் சடலத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (28), இவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா நகரைச் சேர்ந்தவர். இதே ஊரைச் சேர்ந்த நிவேதா(19) என்பவரைக் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திண்டல் அருகே வேப்பம் பாளையத்தில் குடியிருந்து வந்துள்ளனர். முனியப்பன் லாரிகளுக்கு கேஸ் உருளை ஏற்றும் ஊழியராகவும், இவரது மனைவி கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு உறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன் நிவேதாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோபத்தின் உச்சத்திலிருந்த முனியப்பன் நிவேதிதாவைக் கீழே தள்ளி கழுத்தைத் துண்டாக அறுத்துள்ளார்.

பின்னர் தலையைத் தனியே எடுத்து இருசக்கர வாகனத்தின் முன்புறம் பையில் வைத்து விட்டு, உடலை பெட்ரோல் டேங்கின் மீது வைத்து அருகே உள்ள வாய்க்காலில் வீசுவதற்காகக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிலைதடுமாறி அவ்வழியிலிருந்த வீட்டுச் சுவரின் மீது மோதி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதைக் கவனிக்க, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். மேலும் நிவேதாவின் சடலத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு 16.04.19                                                  சதாசிவம்  
                 
பெருந்துறையில் தகாத உறவில்  ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர்....                                                                       
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (28), இவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா நகரை சார்ந்தவர்.இதே ஊரை சார்ந்த நிவேதா(19) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.திருமணத்திற்கு பிறகு திண்டல் அருகே வேப்பம்பாளையத்தில் குடியிருந்து வந்தனர்.முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் ஏற்றும் லோடுமேனாகவும் இவரது மனைவி நிவேதா தனியார் டிப்பார்மென்ட் ஷோரூமிலும் வேலைசெய்து வந்தனர்..நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல  வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு தகாத உறவில்  ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நிவேதாவிற்கும்,முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது முனியப்பன் நிவேதாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி  தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.பவானி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டு வலசு பகுதியில் வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது.அப்போது முனியப்பன் வீட்டில் இருந்து கொண்டு வந்த காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார்.அப்போது முனியப்பனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.அதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் நிவேதாவை கீழே தள்ளி கழுத்தை அறுத்துள்ளார்.பின்னர் தலையை தனியே எடுத்து இருசக்கர வாகனத்தின் முன்புறம் பையில் வைத்து விட்டு உடலை  பெட்ரோல் டேங்கின் மீது வைத்து அருகே உள்ள வாய்காலில் வீசுவதற்காக  கொண்டு சென்றுள்ளார்.அப்போது  அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி விழுந்துள்ளார்... அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து.பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனை கைது செய்தனர்.. மேலும் நிவேதாவின் சடலத்தை ஈரோடு அரசு தலைமை  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... 

Visual send  mojo app..
File name:TN_ERD_04_16_MURDER_VISUAL_7204339

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.