ETV Bharat / jagte-raho

மனைவிக்கு அரிவாள் வெட்டு, கொளுந்தியாளுக்கு கத்தி குத்து: தஞ்சை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - Husband life imprisonment for murdering his wife case in thanjavur

தஞ்சாவூர்: மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Husband life imprisonment for murdering his wife case in thanjavur
author img

By

Published : Oct 15, 2019, 10:58 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கும் திருச்சி வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் விஜயலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க முயன்ற விஜயலட்சுமியின் சகோதரி கமலம் என்பவரையும் கத்தி, அரிவாளால் தாக்கி வெறியாட்டம் ஆடினார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, தங்கராஜ் குற்றவாளி எனக்கூறி மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகைய கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: காதலை கைவிட மகள் மறுப்பு: ஆற்றில் தள்ளிய பெற்றோர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கும் திருச்சி வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் விஜயலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க முயன்ற விஜயலட்சுமியின் சகோதரி கமலம் என்பவரையும் கத்தி, அரிவாளால் தாக்கி வெறியாட்டம் ஆடினார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, தங்கராஜ் குற்றவாளி எனக்கூறி மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகைய கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: காதலை கைவிட மகள் மறுப்பு: ஆற்றில் தள்ளிய பெற்றோர்

Intro:தஞ்சாவூர் அக் 14

மனைவியை கொலை செய்த வழக்கிலும் தடுக்க வந்த சகோதரியை கத்தியால் குத்திய வழக்கிலும் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு் கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புBody:
தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் பூதலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி இவரது கணவர் திருச்சி வாழவந்தான் கோட்டை சேர்ந்த தங்கராஜ் என்ற இருவருக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2016 அவரது வீட்டில் வைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயலட்சுமியை கொலை செய்தார் தடுக்க வந்த விஜயலட்சுமியின் தம்பி மனைவியின் சகோதரி கமலம் அரிவாளால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார் சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் இன்று வந்தது நீதிபதி எழிலரசி தங்கராஜ் குற்றவாளி என கூறி மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் என தீர்ப்பளித்தார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.