ETV Bharat / jagte-raho

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் கணவன் தற்கொலை!

author img

By

Published : Jan 9, 2021, 5:19 PM IST

திருப்பூர்: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் மனமுடைந்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வந்தவர் பாண்டியராஜன் (27). இவருக்கு மனைவி சித்ரா (21) மற்றும் 5 வயது குழந்தை ஆகியோர் உள்ளனர். பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழிலாளராகவும், அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, சித்ராவுக்கும், ராக்கியாபாளையத்தை சேர்ந்த அருண் (22) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை அறிந்த பாண்டியராஜன், மனைவியை கண்டித்துள்ளார். எனினும் அருணுடன் சேர்ந்து வாழவே சித்ரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களாகவே பாண்டியராஜன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் கணவன் தற்கொலை!

இந்நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாண்டியராஜன். முன்னதாக தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம், தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் பேசும் காட்சியையும், கழுத்தில் தூக்கு மாட்டி நிற்கும் காட்சியையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...
தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதையும் படிங்க: லாரி ஓட்டுநர்களிடம் கஞ்சா விற்ற இருவர் கைது!

திருப்பூர் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வந்தவர் பாண்டியராஜன் (27). இவருக்கு மனைவி சித்ரா (21) மற்றும் 5 வயது குழந்தை ஆகியோர் உள்ளனர். பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழிலாளராகவும், அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, சித்ராவுக்கும், ராக்கியாபாளையத்தை சேர்ந்த அருண் (22) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை அறிந்த பாண்டியராஜன், மனைவியை கண்டித்துள்ளார். எனினும் அருணுடன் சேர்ந்து வாழவே சித்ரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களாகவே பாண்டியராஜன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் கணவன் தற்கொலை!

இந்நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாண்டியராஜன். முன்னதாக தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம், தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் பேசும் காட்சியையும், கழுத்தில் தூக்கு மாட்டி நிற்கும் காட்சியையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...
தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதையும் படிங்க: லாரி ஓட்டுநர்களிடம் கஞ்சா விற்ற இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.