ETV Bharat / jagte-raho

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! - வள்ளலார் நகர் - பூந்தமல்லி பஸ்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக இளைஞர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

poonamalle
author img

By

Published : Sep 8, 2019, 10:22 AM IST

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு உள்பட்ட பேருந்து ஒன்று வள்ளலார் நகர் - பூந்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் குமார் என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில், அரசுப் பேருந்து போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை உரசுவதுபோல் சென்றனர். இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு பூந்தமல்லி Government bus glass break Poonamallee வள்ளலார் நகர் - பூந்தமல்லி பஸ் Vallalar Nagar - Poonamallee Bus
கண்ணாடி துகள்கள்

அப்போது பேருந்தில் வந்த பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தை இயக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, பேருந்து காட்டுப்பாக்கம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அரசுப் பேருந்தை வழிமறித்தனர். பின்னர் அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மீது கண்ணாடித் துகள்கள் விழுந்து சிறிய காயம் ஏற்ப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு உள்பட்ட பேருந்து ஒன்று வள்ளலார் நகர் - பூந்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் குமார் என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில், அரசுப் பேருந்து போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை உரசுவதுபோல் சென்றனர். இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு பூந்தமல்லி Government bus glass break Poonamallee வள்ளலார் நகர் - பூந்தமல்லி பஸ் Vallalar Nagar - Poonamallee Bus
கண்ணாடி துகள்கள்

அப்போது பேருந்தில் வந்த பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தை இயக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, பேருந்து காட்டுப்பாக்கம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அரசுப் பேருந்தை வழிமறித்தனர். பின்னர் அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மீது கண்ணாடித் துகள்கள் விழுந்து சிறிய காயம் ஏற்ப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Intro:பூந்தமல்லி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு. வாலிபர்களுக்கு போலீஸ் வலை.



Body:வள்ளலார் நகரில் இருந்து பூந்தமல்லி நோக்கி
அரசு பஸ் இன்று மாலை
சென்று கொண்டிருந்தது அரசு பஸ்சை டிரைவர் குமார் ஓட்டினார். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ்சில் உரசுவதுபோல் சென்றனர். இதனால் பஸ் டிரைவருக்கும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்டு பஸ்சை டிரைவர் அங்கிருந்து எடுத்து சென்றார். காட்டுப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அரசு பஸ்சை வழிமறித்து மர்ம நபர்கள் கீழே இருந்த கல்லை எடுத்து அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மீது கண்ணாடி துகள்கள் விழுந்தது.

Conclusion:இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.