ETV Bharat / jagte-raho

ரவுடி கடத்தி கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு!

author img

By

Published : Jan 21, 2020, 7:34 PM IST

சென்னை: ஐஸ் ஹவுஸில் ரவுடியை ஒரு கும்பல் கொலைசெய்யும் முன் தாக்கி ஆட்டோவில் கடத்திச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி என்பவரது மகன் ராம்குமார் (24). இவர் கடந்த 15 ஆம் தேதி நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை குடிபோதையில் பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இதற்கு பழிதீர்ப்பதற்காக, ஆட்டோவில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ராம்குமாரை சரமாரியாகக் கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர் அக்கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றது.

இது தொடர்பாக ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், ஐஸ் அவுஸ் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹீம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகியோர் ராம்குமாரை கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் ஆட்டோவில் கடத்திச்சென்று கொலைசெய்தது தெரியவந்தது.

மேலும், கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் உடலைக் காவலர்கள் கண்டெடுத்தனர். இக்கொலையில் தொடர்புடைய, பிரேம் குமார் உள்ளிட்ட எட்டு பேரை ஐஸ் அவுஸ் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ரவுடி கடத்தி கொலை - சிசிடிவி காட்சி வெளியீடு

இந்நிலையில், கொலைசெய்யப்படுவதற்கு முன் ராம்குமாரைத் தாக்கி அந்தக் கும்பல் ஆட்டோவில் ஏற்றிச்செல்லக்கூடிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பூட்டிய கடைக்குள் உயிரிழந்த நபர் - சிக்கிய கடிதம்

நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி என்பவரது மகன் ராம்குமார் (24). இவர் கடந்த 15 ஆம் தேதி நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை குடிபோதையில் பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இதற்கு பழிதீர்ப்பதற்காக, ஆட்டோவில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ராம்குமாரை சரமாரியாகக் கத்தியால் வெட்டியுள்ளனர். பின்னர் அக்கும்பல் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றது.

இது தொடர்பாக ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், ஐஸ் அவுஸ் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சிவமணி, அப்துல் ரஹீம், அஸ்மத், சுபான், கார்த்திக், ரஞ்சித், வினோத் ஆகியோர் ராம்குமாரை கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் ஆட்டோவில் கடத்திச்சென்று கொலைசெய்தது தெரியவந்தது.

மேலும், கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் உடலைக் காவலர்கள் கண்டெடுத்தனர். இக்கொலையில் தொடர்புடைய, பிரேம் குமார் உள்ளிட்ட எட்டு பேரை ஐஸ் அவுஸ் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ரவுடி கடத்தி கொலை - சிசிடிவி காட்சி வெளியீடு

இந்நிலையில், கொலைசெய்யப்படுவதற்கு முன் ராம்குமாரைத் தாக்கி அந்தக் கும்பல் ஆட்டோவில் ஏற்றிச்செல்லக்கூடிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பூட்டிய கடைக்குள் உயிரிழந்த நபர் - சிக்கிய கடிதம்

Intro:Body:சென்னையில் ரவுடியை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நீலாங்கரை வெட்டுவாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி 54 இவரது மகம் ராம்குமார் 24 திருவல்லிக்கேணி பி.பி குளத்தில் தங்கி ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 15ஆம் தேதி நடுகுப்பத்தை சேர்ந்த பிரேம் குமார் 25 என்பவரை குடிப்போதையில் ராம்குமார் பாட்டிலால் கழுத்தில் குத்தியுள்ளார்.இதில் ஏற்பட்ட காயம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிலிச்சை பெற்று வந்தார்.இது தொடர்பாக ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த ராம்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கு ஆட்டோவில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் வந்து ராம்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டுயுள்ளனர்.இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளார்.பின்னர் இதே கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்றனர். இது தொடர்பாக ராம் குமாரின் தந்தை குருமூர்த்தி ஐஸ் அவுஸ் போலீசாரிடம் புகார் அளித்தார்.இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலிசார் வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணியை சேர்ந்த அப்பு24,ஜெகன்(29),ஆட்டோ டிரைவர் அருண் 30 ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம் குமார் 25,சிவமணி, அப்துல் ரஹீம்,அஸ்மத்,சுபான்,கார்த்திக்,ரஞ்சித்,வினோத் ஆகியோர் ராம்குமாரை வெட்டி அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது.

மேலும் பிடிப்பட்ட நபர் அளித்த தகவலின் பேரில் கோவளம் கல்லுக்குட்டை பகுதியில் ராம்குமார் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.இக்கொலை வழக்கு சம்மந்தமாக தலைமறைவாக உள்ள பிரேம் குமார் உள்ளிட்ட 8பேரை ஐஸ் அவுஸ் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ராம்குமாரை ஒரு கும்பல் ஆட்டோவில் தாக்கி ஏற்றக்கூடிய சிசிடிவி தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.