லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அவரது உடல் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள அவரது கணவர் மறைந்த இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
பின் "ராணி, எடின்பர்க் டியூக்குடன், தி கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார்" என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அரச குடும்ப இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து சாலை வழியாக சுமார் 40 கி.மீ. வழித்தடத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தை தலைமை தாங்கிய வின்ட்சர் டீன், "கடவுளின் கைகளில் அவரது பணியாளரான ராணி எலிசபெத்தின் ஆன்மாவை ஒப்புக்கொடுக்க நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். வேகமாக மாறி வரும் மற்றும் அடிக்கடி பிரச்சனைகள் நிறைந்த உலகின் மத்தியில், அவரது அமைதியான மற்றும் கண்ணியமான இருப்பு அமையட்டும். அவர்களின் வாழ்வு, தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தை எதிர்கொள்ள நம்பிக்கையை அளித்துள்ளது.
நன்றியுள்ள இதயங்களுடன், அவர்களுடைய நீண்ட வாழ்க்கை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். பல வழிகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, ராணியின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவரின் நினைவைப் போற்ற கடவுள் அருள் புரிவார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூனை வளர்த்தவரின் வீட்டிற்கே திரும்பிய அதிசயம்!