ETV Bharat / international

வரலாறு காணாத வெள்ளம்... பாகிஸ்தான் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்... பாகிஸ்தான் அரசு வேண்டுகோள்...

author img

By

Published : Sep 4, 2022, 11:21 AM IST

Updated : Sep 4, 2022, 11:30 AM IST

பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Flood
Flood

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமாக கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் இதுவரை, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(செப்.3) ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்தனர். 12,577 பேர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள நிவாரண முகாம்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதில் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும் பாதிப்புகள் அதிகளவு இருப்பதால், நிலைமையை கையாள முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு தாக்கிய கட்ரீனா புயலைப் போன்ற மிகப்பெரிய பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்பி வைத்தன. பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் வரும் 9ஆம் தேதி, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பாகிஸ்தான் வருகிறார். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி புரிய வேண்டும் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமாக கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் இதுவரை, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(செப்.3) ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்தனர். 12,577 பேர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள நிவாரண முகாம்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதில் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும் பாதிப்புகள் அதிகளவு இருப்பதால், நிலைமையை கையாள முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு தாக்கிய கட்ரீனா புயலைப் போன்ற மிகப்பெரிய பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்பி வைத்தன. பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் வரும் 9ஆம் தேதி, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பாகிஸ்தான் வருகிறார். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி புரிய வேண்டும் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளம்... 124 பேர் உயிரிழப்பு... 10 ஆயிரம் வீடுகள் நாசம்...


Last Updated : Sep 4, 2022, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.