பெய்ரூட்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானிலிருந்து சிரியாவிற்கு அதிகளவில் எரிபொருள்கள் கடத்தப்படுகின்றன. இதனால், லெபனான் ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே, எல்லையில் பறிமுதல்செய்யப்பட்ட எரிபொருள் டேங்கர் ஒன்றை, ராணுவ வீரர்கள் லெபனானின் வடக்கில் உள்ள அக்கார் என்னும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 28 பேர் உயிரிழந்தனர். 79 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில், டேங்கரில் 60 ஆயிரம் லிட்டர் எரிபொருள் இருந்ததும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்தபோது வெடிவிபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்