ETV Bharat / international

ஆப்கான் தொடர் தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு; 34 பேர் காயம்!

author img

By

Published : May 31, 2021, 12:35 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாள்களில் நடந்தத் தொடர் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

Afghanistan
ஆப்கான்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் வடக்குப் பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று (மே.30) பீரங்கிக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு பீரங்கிக் குண்டு, அங்குத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது. இதில் குறைந்தது 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல, நங்கர்ஹார் மாகாணத்தில் ஷிர்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். முன்னதாக, மே 29இல், பல்கலைக்கழகத்தின் பேருந்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு தாக்குதலில், பேராசிரியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த இரு நாள்களில் நடந்த தாக்குதலில், 20 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் 34 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மியான்மர் ராணுவத் தாக்குதல்: இதுவரை 840 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் வடக்குப் பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று (மே.30) பீரங்கிக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு பீரங்கிக் குண்டு, அங்குத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது. இதில் குறைந்தது 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல, நங்கர்ஹார் மாகாணத்தில் ஷிர்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். முன்னதாக, மே 29இல், பல்கலைக்கழகத்தின் பேருந்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு தாக்குதலில், பேராசிரியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த இரு நாள்களில் நடந்த தாக்குதலில், 20 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் 34 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மியான்மர் ராணுவத் தாக்குதல்: இதுவரை 840 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.