ETV Bharat / international

கோவிட்-19: தென்கொரியா, பிரான்சில் மீண்டும் தலைதூக்கும் கரோனா

author img

By

Published : Oct 23, 2020, 1:39 PM IST

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா கட்டுக்குள் வரும் நிலையில், தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெருந்தொற்று மீண்டும் தீவிரமடைந்துவருகிறது.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 4 கோடியே 19 லட்சத்து 94 ஆயிரத்து 442 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 36 ஆயிரத்து 341ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 231ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 லட்சத்து 07 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 86 லட்சத்து 61 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 381 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெருந்தொற்று தீவிரமடைந்துவருகிறது. அந்நாட்டில் மேலும், தென்கொரியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு தீவிரத்தன்மை மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல்

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 4 கோடியே 19 லட்சத்து 94 ஆயிரத்து 442 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 36 ஆயிரத்து 341ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 231ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 லட்சத்து 07 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 86 லட்சத்து 61 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 381 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெருந்தொற்று தீவிரமடைந்துவருகிறது. அந்நாட்டில் மேலும், தென்கொரியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு தீவிரத்தன்மை மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.