ETV Bharat / international

'என்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்' -  நிரவ் மோடி மிரட்டல்!

author img

By

Published : Nov 7, 2019, 10:08 PM IST

லண்டன்: தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார்.

nirav

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, தனக்கு பிணை வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றத்துக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.

இதனால் மனமுடைந்த நிரவ் மோடி, "என்னை நாடு கடத்த உத்தரவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா அரசு தரப்பில் நிரவ் மோடிக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஜேமஸ் லூவில் கூறுகையில்," தன்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுகிறார். தப்பியோடும் நோக்கம் கொண்டவர்களே இதுபோன்று பேசுவார்கள்" என்றார்.

இதையும் வாசிங்க: நகரங்களுக்கான கடினமான நேரங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, தனக்கு பிணை வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றத்துக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.

இதனால் மனமுடைந்த நிரவ் மோடி, "என்னை நாடு கடத்த உத்தரவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா அரசு தரப்பில் நிரவ் மோடிக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஜேமஸ் லூவில் கூறுகையில்," தன்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டுகிறார். தப்பியோடும் நோக்கம் கொண்டவர்களே இதுபோன்று பேசுவார்கள்" என்றார்.

இதையும் வாசிங்க: நகரங்களுக்கான கடினமான நேரங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.