ETV Bharat / international

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்!

author img

By

Published : Jan 14, 2021, 9:19 AM IST

லண்டன்: பொங்கல் திருநாளான இன்று (ஜன.14) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

Pongal wish
இங்கிலாந்து பிரதமர்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (ஜன.14) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தமிழில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ’வணக்கம், பிரிட்டனில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள். இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கலிட்டு சிறப்பான தைப்பொங்கலை இன்று கொண்டாடுங்கள். கரோனாவுக்கு எதிராக போராடும்போது சிறப்பான பங்களிப்பு அளித்த தமிழ் முன்கள பணியாளர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தலைவர்கள் கொண்டாடும் 'மாஸ்டர்' பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (ஜன.14) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தமிழில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ’வணக்கம், பிரிட்டனில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள். இயற்கையின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கலிட்டு சிறப்பான தைப்பொங்கலை இன்று கொண்டாடுங்கள். கரோனாவுக்கு எதிராக போராடும்போது சிறப்பான பங்களிப்பு அளித்த தமிழ் முன்கள பணியாளர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தலைவர்கள் கொண்டாடும் 'மாஸ்டர்' பொங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.