கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், பெய்ஜிங்யில் உள்ள டிடன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு கரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் அவர், நோயாளிகளைப் பார்வையிட்டு மருத்துவர்களை முழுமையாக நம்புங்கள் என ஆறுதல் தெரிவித்தார். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவுபகலாக சேவைசெய்யும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு அதிக மரியாதையும், நன்றியும் தெரிவித்தார். மேலும் கரோனா பாதிப்பு அதிகமுள்ள வூஹானில் உள்ள மருத்துவர்களிடம் வீடியோ அழைப்பு மூலம் உரையாடினார்.
இதையும் படிங்க: சிட்னியைப் புரட்டி போட்ட டேமியன் புயல் - ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரம் நிறுத்தம்!